Sunday, December 6, 2009

முடியப்போகுது 2009









இந்த ஆண்டு முடிய இன்னும் 24 நாட்கள் இருக்கின்றன. உலகைச் சுற்றி, நாட்டை சுற்றி, மாநிலத்தை சுற்றி, நகரை சுற்றி, தெருவை சுற்றி, வீட்டை சுற்றி எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் தமிழினத்துக்காக போராடிய ஒரு போராட்டம் வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை மீண்டும் ஆட்சி செய்ய காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தி.மு.க. கூட்டணியே வெற்றிக்கனி பறித்தது. அம்மா வீட்டுக்குப்போன ராமதாஸ் அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறினார். கொடநாட்டில் ஓய்வெடுத்த அம்மா மீண்டும் சென்னைக்கு வந்து இடைத்தேர்தலில் குதிப்பதாக அறிவித்திருக்கிறார். எங்கள் தெருவில் இந்த மழைகாலத்தில் சில முதியவர்கள் இறந்து விட்டனர். என் குழந்தை நிறைய கேள்விகள் கேட்கிறாள். ஏர்டெல் இணைப்பில் இருந்து பிஎஸ்என் இணைப்புக்கு மாறியிருக்கிறேன். ஏன்? மாறினேனோ என்று என்னும் படி பிஎஸ்என்எல்லில் படுத்தி எடுத்துவிட்டனர்.
இந்த வருடம் மழை சென்னையை அவ்வளவாக மிதக்க விடவில்லை. ஆந்திராவில் அடுத்தடுத்த அதிரடிகளால் அந்த மாநிலம் குலுங்குகிறது. ராஜசேகர ரெட்டி மரணம். சந்திசேகரராவ் உண்ணாவிரதம்.
தமிழகத்திலோ நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியில் ஓய்வு அறிவிப்பு வெளியானது. 2010 ஜூனுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பு முரசொலியை தவிர மற்ற எல்லாவற்றிலும் வந்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டாரோ என்னவோ தெரியல.
இந்த ஆண்டில் ஒரு சிறிய பழைய அப்பார்ட்மெண்ட் வாங்க முயற்சித்து தோல்வியில் முடிந்தது. மன கசப்பும் ஏற்பட்டுவிட்டது.
எப்படியோ 2009 குழந்தையின் ஆயுள் முடியப்போகிறது. அடுத்த புதுவரவான 2010 எப்படி இருக்குமோ?



சோனியா-சபத்தில் வென்ற நாயகி. (தமிழினத்தை அழித்து)
பல்டியின் நாயகர்(முதல்வர் கருணாநிதி)
ராமதாஸ் (எப்படிங்கன்னா தோத்த கட்சியாச்சு?)
திருமாவளவன்(இரண்டு மனம் வேண்டும். பிழைத்து வாழ ஒன்று, தமிழர்களை பற்றி பேச ஒன்று)

Saturday, September 5, 2009

ஒரு வேலை வாய்ப்பு

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பர ஏஜென்சி எடுத்திருக்கிறார். இந்த பணிக்காக விளம்பரம் சேகரிக்கக்கூடியவர்கள் இருந்தால் தொடர்புகொள்ளலாம். இப்போது நாளிதழ்களில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் இந்த பணியை விருப்பம் இருந்தால் செய்யலாம். புதிதாக இந்த பணியை செய்ய விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல் நம்பர் 99529 36461 அல்லது தொலைபேசி எண் 044 43523526 அல்லது varshaad09@gmail.com உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் இது பற்றி சொல்லுங்கள் நன்றி.

Thursday, August 6, 2009

பிளாஷ் நியூஸ்: செல்ராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது

கொழும்பு: இலங்கையில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் கடந்த மே 18ம் தேதி முடிவுக்கு வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். புலிகளின் வெளியுறவுத்துறை தலைவர் செல்ராசா பத்மநாதன் உட்பட மேலும் சில புலிகள் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில், பிரபாகரன் விட்டுச் சென்ற போராட்ட பாதையை செல்வராசா பத்மநாதன் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று புலிகளின் செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு அறிக்கை வெளியானது. இந்நிலையில், புலிகளின் புதிய தலைவர் பற்றி இலங்கை அரசு நீண்டநாட்களாக கருத்து எதுவும் சொல்லவில்லை. இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக கூறுகையில், புதிய தலைவரின் கீழ் புலிகள் மீண்டும் ஒன்றுபடுவதை இலங்கை அரசு அழிக்கும் என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். இதற்கிடையே அதிரடி திருப்பமாக தாய்லாந்து நாட்டில் பதுங்கியிருந்த செல்வராசா பத்மநாதன் நேற்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு பத்திரிகை உலக வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கடத்திய வழக்கில் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள செல்வராசா பத்மநாதன் மீது இன்டர்போல் போலீசாரின் கைது வாரண்ட் நிலுவையில் இருந்தது என இலங்கை டிவி சேனல்கள் கூறுகின்றன.

Tuesday, July 21, 2009

பிளாஷ் நியூஸ் புலிகளின் புதிய தலைவர்:


ஜூலை 21: புலிகள் தலைவர் பிரபாகரனால்,அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அதர்ச்சியளிக்கும் வகையில் புலிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் தோற்றுவிட்டது என இலங்கையும், அதன் ஜால்ரா நாடுகளும் நினைத்திருக்கும் மாயையையும் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளனர்.
புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழு சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்மிகுந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை அரசு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை. எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் இந்த கடமை எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம்.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.
எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.
எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப தேசியத் தலைவர் பிரபாகரன், புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமித்த செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப எமது போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார். புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கின்றோம்.
போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில், இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்போம். எமது எதிர்கால செயல்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலைபோன்ற ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைத்தால் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.
எமது தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

Sunday, July 19, 2009

இளகிய மனதுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம், படங்களை பார்க்க வேண்டாம்









மனிதனின் உடல் உறுப்புகளான கிட்னி, கண்களை விற்கும் தொழிற்சாலை ஒன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதை சிலர் நம்பாமல் போகலாம். அதற்கு சாட்சிதான் இந்த படங்கள். கார்விபத்துகளில் பலியாகும் நபர்கள், யாருமற்ற அனாதைகளாக மரணம் அடையும் நபர்கள், தூக்கிலிடப்படும் நபர்கள், விவரிக்கமுடியாத மரணங்கள், யாரும் கோராமல் பிணவறையில் இருக்கும் பிணங்கள் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இவை மருத்துவமாணவர்களுக்காக மருத்துவப்பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இர்லேந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மனிதனின் எலும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் இதே போல மனித உடல் பாகங்களை ஏற்றுதி செய்யும் தொழிற்சாலை இருக்கிறதாம். யாருக்காவது தெரிந்தால் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, July 18, 2009

கலைஞர் டிவியில் வரும் கேடுகெட்ட தொடர்




கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் என்ற தொடர் ஒன்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிரப்பாகிறது. நம் வலை நண்பர்கள் தற்செயலாக அதை பார்த்திருக்கலாம். தொடர் முழுவதுமே நெகட்டிவ் தாட்களைக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்த தொடரின் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட விதம் எல்லாமே மோசம் என்பதும் குறிப்பிடத்தான் வேண்டும். தவிர இந்த தொடரில் வரும் காட்சிகளின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் வந்த ஒரு காட்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கிறது. அதை விரும்பாத ஒருவன் திருமணத்திற்கு பந்தல் போடுதற்கு முகூர்த்தக்கால் ஊன்றுவார்கள் இல்லையா? அந்த முகூர்த்தகாலுக்கு தீவைக்கிறான். இதுவரை இது போன்று நடைமுறையில் நடந்திருக்கிறதா? என்று யாராவது சொல்லமுடியுமா? இந்த தொடரப்பார்த்த பிறகு வேண்டுமானால் அது போல் பலர் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். இது போன்ற கேடுகெட்ட காட்சியை தமிழகத்தின் முதல்வர் குடும்பம் நடத்தும் டிவியில் இடம் பெறலாமா?
இது போன்று நெகட்டிவ் தாட் உடன் கூடிய காட்சிகள் இந்த தொடரில் அதிகம் இடம் பெறுகின்றன.

Tuesday, July 14, 2009

நான் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு புத்தகம்

வாழ்க்கையில் ஒரு விபத்து போலத்தான் புத்தகம் எழுதுவதும் நேர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணையாழி, சுதேசமித்திரன்&இளையமித்திரன் உள்ளிட்ட சில இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதே திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நண்பர் என் கவிதைகளை புத்தகமாக வெளியிடலாமே என்று விரும்பினார். அதற்காக அட்டைப்படம் எல்லாம் கூட ஒரு நண்பர் போட்டுக்கொடுத்தார். பட்டுக்கோட்டை பிரபாகர் கூட முன்னுரையெல்லாம் எழுதிக்கொடுத்தார். அதன் பின்னர் அந்த நண்பர் என் கவிதைகளை புத்தகமாக போட முன்வரவில்லை. எனவே என் முதல் முயற்சி முயற்சியிலேயே முடிந்து போனது.
அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பிரபல நாளிதழில் பணியாற்றினேன். பின்னர் அங்கிருந்து விலகி விட்டேன். அந்த நாளிதழில் பணியாற்றிய சிலர் இணைந்து ஒரு பதிப்பகம் தொடங்கினர். என் மேல் அக்கறை கொண்ட மூத்த நிருபர் மொழிபெயர்ப்பு புத்தகம் எழுதும் வாய்ப்புக்கொடுத்தார். டோரிஸ் லெஸ்சிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வாங்கினர். அவரைபற்றி எழுதுங்கள் என்றார். அதன் விளைவாக எழுதியதுதான் டோரிஸ் லெஸ்சிங் என்ற புத்தகம்.
மீண்டும் புத்தகம் வருவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. என்னை புத்தகம் எழுதச்சொன்னவர் அந்த பதிப்பகத்தில் இருந்து சில காரணங்களுக்காக விலகிவிட்டார். எனவே வேறு ஒரு பதிப்பக நண்பர் மூலம் அணுகி சந்தியா பதிப்பகத்தில் இருந்து என் புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இது என்னுடைய முதல் புத்தகம்

புத்தகத்தின் தலைப்பு: டோரிஸ் லெஸ்சிங்

நூலாசிரியர்: கே. உமாபதி

வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை&83

முடிந்தால் வாங்கி படியுங்கள் நண்பர்களே!

இந்த புத்தகத்தின் விமர்சனம் கடந்த 12 07 09 தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ளது.

Thursday, June 18, 2009

பிரபாகரன் வீரமரணம்: புலிகளின் புலனாய்வு பிரிவு ஒப்புதல்



கொழும்பு,ஜூன்18புலிகள் தலைவர் பிரபாகரன், ராணுவத்துடன் போரிட்ட போது வீரமரணம் அடைந்து விட்டதாக புலிகள் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் கூறியுள்ளார். இலங்கை இறுதிப்போரில் பிரபாகன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. உடலை கைபற்றி எரித்து விட்டதாகவும் கூறினர். ஆனால் புலிகள் தரப்பில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினர். இதற்கிடையே புலிகள் தரப்பில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் நலமாக இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வெளியுறவுப்பிரிவு தலைவர் செல்வராசா பத்மநாதன் மே 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று தெரிவித்தார். புலிகள் அமைப்பிலிருந்து இரு வேறுபட்ட தகவல்கள் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. புலிகள் அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றும் செய்திகள் வெளியாயின.இந்நிலையில், புலிகளின் புலனாய்வு பிரிவு மற்றும் வெளியகப்பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது இயக்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார். இதை புலிகளின் புலனாய்வுத் துறை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இறுதிப்போரின் போது பிரபாகரனை பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியில் அவருடன் எமது புலனாய்வு போராளிகள் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். இவர்கள் இப்போது அளித்த தகவல்கள் மற்றும் இலங்கை ராணுவத்துடன் தொடர்புடைய எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் கூறும் தகவல்கள் ஆகியவை தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.கடந்த மே மாதத்தில் 15ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரையிலான காலப்பகுதியில் வன்னி, முள்ளிவாய்க்கால் போர் பகுதியில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வந்த படி இருந்தன. சீரான தகவல்கள் கிடைக்கவில்லை. போர் முனையில் இருந்து வெளியேறிய புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று சேரமுடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் அனுப்பிய தகவல்கள் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. ஆனால் அப்போது கிடைத்த தகவல்களை சீர்படுத்தியதன் அடிப்படையில் எங்கள் அன்புக்குரிய தலைவர் நலமாக இருப்பதாக கருதி மே 22ம் தேதி அப்படி ஒரு செய்தி வெளியிட தீர்மானித்தோம். இந்த நிலையில், பிரபாகரனின் பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக இறுதி வரை அவருடன் இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் சர்வதேச உறவுத் துறை இயக்குனர் செல்வராசா பத்மநாதன் ஆரம்பத்தில் இரு வேறு முரண்பட்ட செய்திகளை தரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் என்பதை எங்களால் உணர முடிகிறது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்தியை மே 22ம் தேதி வெளியிட்டதற்காக வருத்தப்படுகின்றோம். அந்த செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது. பிரபாகரனின் வீரமரணம் தொடர்பாக பல தரப்பினர் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் கொல்லப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் பல மாறுபட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்பு உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.

Monday, June 15, 2009

தமிழர்களை காட்டி பிச்சையெடுக்கும் ராஜபக்சே

இலங்கை போர் முடிந்த பிறகு, ராஜபக்சே ரத்தம் குடித்ததை தவிர மிச்சம் இருக்கும் தமிழர்கள் நிலை எதிர்பார்த்ததை போலவே கவலையளிப்பதாக மாறியிருக்கிறது. முகாம்களில் வதைபடும் லட்சக்கணக்கான தமிழர்களை காட்டி சர்வதேச நாடுகளில் நிதி உதவியை பெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இதனால்தான் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், தமிழர்களுக்கான நிவாரண உதவிகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு முன்பே, தமிழர்களை கொன்று குவித்ததற்கு பரிசாக இந்திய அரசு ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்தது. பின்னர் இதை ரூ1000ம் கோடியாக உயர்த்தியது.
இப்போது ராஜபக்சே ஊர் ஊராக சென்று தமிழர்கள் மானத்தை விற்று பிச்சையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். மியான்மர் சென்றுள்ள ராஜபக்சே நிருபர்களிடம் கூறுகையில், புலிகளுக்கு எதிரான போரில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்திருக்கின்றனர் என்று நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார். இந்த நீலிக்கண்ணீரை நம்பி பரிதாபப்பட்ட மியார்மர் அரசு இலங்கைக்கு 50 ஆயிரம் டாலர் அதாவது ரூ.25 லட்சம் உதவித்தொகையை அள்ளிக்கொடுத்திருக்கிறது.
இப்படி ஊர் ஊராக பிச்சையெடுக்கும் ராஜபக்சே தொடர்ந்து தமிழர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றவும் திட்டமிட்டுள்ளார் என்பது உறுதியாகி இருக்கிறது.

Monday, June 8, 2009

மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்


தென்மேற்கு பருவக்காற்று வீசும் தேனி பக்கம் சமீபத்தில் சென்றிருந்தேன். சென்னையில் இருந்து திருச்சி போய், திருச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று, திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்ல காலை 9.30 ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரே பிளாட்பாரத்தில் பழக்கடையுடன் இணைந்த ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தேன். என் அருகில் கிராமத்து தம்பதியர் நின்றிருந்தனர். அவர்களின் தோற்றத்தை பார்க்கும் போது 45 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களும் ஜூஸ் சாப்பிட்டனர். சில நிமிடங்களில் அவர்கள் அருகில் இன்னொரு ஆண் வந்து நின்றார். அவரை சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. திடீரென கவனித்த அந்த தம்பதியினர் என்னய்யா இந்த பக்கம் என்று விசாரித்தனர். சும்மா ஒரு ஜோலியா வந்தேன் என்றார். இவர்கள் ஜூஸ் குடிப்பதை பார்த்து அவருக்குள் ஒரு ஏக்கம் இருந்திருக்க வேண்டும். தம்பதியரில் ஆண், தன் மனைவியை கண்ணால் ஜாடை காட்டி என்ன இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கலாமா என்று அனுமதி கேட்டார். அதற்குள் அந்த மனிதர் இதை புரிந்து கொண்டார். ஜூஸ் கடைக்காரரிடம் சத்தமாக எனக்கு ஒரு ஜூஸ் போடுப்பா என்றார். அந்த சத்தத்தில் நீங்க வாங்கிக் கொடுக்காட்டி என்ன நான் குடிக்கமாட்டேனா என்ற அர்த்தங்கள் பொதிந்திருந்தது. இது போன்ற மெல்லிய உணர்வுகள் தென் மாவட்டங்கள் பக்கம் அதிகமாக இருக்கிறது. மெல்லிய உணர்வுகள், ஏக்கங்கள் புறக்கணிக்கும் போது ஈகோவாக, கோபமாக வெளிப்படுகிறது என்று கருதுகிறேன். எனவே மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

சென்னை கொடூர கொலை: சட்டம் ஓழுங்கு சீர்குலைவு




சென்னையில் சுரேஷ்குமார் என்ற நகை வியபாரி கொடூரமாக வெட்டி கொலை செய்திருப்பது தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயின் கோவில் பூசாரியை கொன்று கோவிலை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
சுரேஷ்குமார் கொலைக்கு 2 நாட்களுக் முன்புதான் தமிழகத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் என்று கூறி சென்னை முழுவதும் வாகனசோதனை நடத்தினோம் என்றனர். ஆனால் சுரேஷ்குமாரை கொன்றவர்கள் உடலை வெட்டி 3 பகுதியாக பிரித்து சினிமா தியேட்டர் அருகே உள்ள தெருக்களில் சுதந்திரமாக வீசி சென்று இருக்கின்றனர். தீவிரவாதிகள் நடமாட்டத்துக்காக வாகனசோதனை நடத்திய போலீசாரிடம் இந்த மர்ம நபர்கள் மாட்டவில்லையா? இரவு ரோந்து போலீசாரின் நோக்கம் அப்பாவிகளை பிடித்து பணம் பறிப்பதுதான் என்பதும் தெளிவாகிறது. ஒழுங்காக வாகனசோதனை செய்தால் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாமே என்பது நம் எண்ணம்.
நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது கொலை கொள்ளைகள் சகஜமாகி வருகிறது. போலீஸ் கைகள் சுதந்திரமாக இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் கைகளில் நிறைய காசு புழங்கியது. அதன் தெனாவெட்டில் இப்போது நகரில் தங்கள் ராஜ்யத்தை தொடங்கியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் ஆதரவை கோரும் கட்சிகள் அவர்களை கண்டும் காணாமல் விட்டு விடுவது சட்டம் ஒழுங்குக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும்.
அடுத்த கொலை நடக்கும் முன்பாவது போலீசார் விழிப்படைய வேண்டும். செய்வார்களா?

Saturday, June 6, 2009

பயணம் 2 கரிசல் காட்டு சூரியகாந்தி






என் பயணத்தில் என் அம்மத்தாளுடன் என் ஊரில் இருந்து கோனூர் என்ற சிற்றூருக்கு பயணம் சென்றதை மறக்கவே முடியாது. வக்கம்பட்டியில் இருந்து காலையில் 10 மணிக்கு கிளம்புவோம். போகும் போது, அரிசி எல்லாம் எடுத்துக்கொள்வோம். என் அம்மத்தாவின் சகோதரி வீட்டில் கொடுப்பதற்காக எடுத்து செல்வோம். வக்கம்பட்டியில் ஓடும் குடகனாற்றை கடந்து செல்வோம். எப்போதும் முழங்கால் அளவு தண்ணீர் ஓடும். தண்ணீர் ஜில்லிட இறங்கி தாண்டி கும்மம்பட்டி வழியே நடந்து ஒற்றையடிப்பாதையில் செல்வோம். வெயில் அதிகம் இருந்தால் கொஞ்ச நேரம் மரநிழலில் அமர்ந்து விட்டு செல்வோம். அனுமந்தராயன் கோட்டை வழியே சென்று கோனூர் பிரிவுக்கு போகும் போது கரிசல் காட்டு மண்ணை பார்க்க முடியும். ஏன் மண் இவ்வளவு கருப்பாக இருக்கிறது என்று எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கும். வக்கம்பட்டியில் எல்லாம் செம்மண் ஆகத்தான் இருக்கும். இங்கே மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று புரியவில்லை. அந்த கரிசல் நிலத்தில் அழகாக சூரியகாந்தி பூக்கள் சிரிக்கும். பெரிய பெரிய இலைகளுடன் செடிகள் இருக்கும். ரொம்ப நாளாக அது என்ன செடி என்று தெரியவில்லை. பின்னர்தான் அது புகையிலை இலை என்று தெரிந்தது. கோனூருக்குள் நுழைவதற்கு முன் ஒரு கால்வாய் ஓடும். ரோட்டில் இருந்து மிக சரிவாக இருக்கும். பயந்து பயந்து நடந்து செல்வேன். அம்மத்தா கொண்டு வரும் துணி பைகளை நான்தான் சுமந்து செல்வேன். கோனூரில் அம்மத்தாவின் சகோதரி வீட்டுக்கு போனதும், அந்த சகோதரியின் மருமகன் எனக்கு மாமா முறை வேண்டும். அவரது மளிகைக்கடையில் தேன் மிட்டாய் எடுத்து சாப்பிடுவேன். மாமா பையன்கள். மாமா பெண்ணுடன் விளையாடுவேன். இரவு திருவிழாவில் கொட்ட கொட்ட விழித்திருந்து நாடகம் பார்ப்போம். சில நாட்களில் திரைப்படமும் காட்டுவார்கள். ஆண்டு தோறும் திருவிழாவின் போது இந்த பயணம் தொடர்ந்தது. விவரம் தெரிந்து பெரிய ஆளான பிறகும் இந்த ஊருக்கு பயணம் செய்தேன். பெண் கேட்டு பயணப்பட்டேன். அந்த பயணம் தோல்வியில் முடிந்தது.இன்னும் இந்த கரிசல் மனதில் சூரியகாந்தியாய் அமர்ந்திருக்கிறது கோனூர் பயணம். அடுத்ததாக என் பயணத்தில் பள்ளிப் பயணம்....

Friday, June 5, 2009

பயணங்கள்




பயணங்கள் எப்போதும் இனிமையானவை. எனக்கு மட்டுமல்ல.பலருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். என் தாய் என்னை கர்ப்பத்தில் சுமந்தது ஞாபகம் இல்லை. ஆனால் என் பாட்டி என்னை அழைத்துக்கொண்டு அடிக்கடி போடிக்கும், வக்கம்பட்டி என்ற சிற்றூருக்கும் பஸ்சில் அழைத்து செல்வாள். போடியில் இருந்து பஸ் ஏறுவதற்கு முன்பு பை நிறைய பூந்தியும், அதிரசமும் அள்ளி எடுத்துக்கொள்வாள். இவையெல்லாம் பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுட சுட தயாராகும். பஸ்சில் வத்தலக்குண்டு தாண்டி வரும்போது சிறிய மேட்டு வளைவில் பஸ் ஏறுகையில் அந்த பகுதியை பார்ப்பதில் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு. வக்கம்பட்டியில் எங்களுக்காவே ரூட் பஸ் நிற்கும். போடியில் என் மாமா ஒரு நாளிதழின் நிருபராக இருப்பதால் டிரைவரிடம் முன் கூட்டியே சொல்லி விடுவதால் இந்த சலுகை. என் அம்மத்தாவுக்கு என் அம்மா ஒரே பெண் பிள்ளை என்பதால் இவ்வளவு பாசம். எனவே என்னை அம்மத்தாவே கூட்டிக்கொண்டு போய் போடியில் வளர்த்தாள்.
என் அம்மாவீட்டுக்கு வந்ததோடு நிற்கமாட்டாள் என் அம்மத்தாள் அடுத்ததாக சில கி.மீ. தூரத்தில் இருக்கும் அவளின் சகோதரி வீட்டுக்கு கிளம்புவாள். அது ஆறு, கால்வாய்களை கடந்து செல்லும் பயணம் மிக இனிமையாக இருக்கும். அந்த பயணத்தை நாளை சொல்கிறேன்.

Sunday, May 17, 2009

எக்ஸ்குளூசிவ்: ஆயுதங்களை கீழே போட தயார்: புலிகள் அறிவிப்பு

புலிகளை தோற்கடித்து விட்டோம் என்று ராஜபக்சே கொக்கரித்தார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று ராணுவம் கதை விட்டது. இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி நிருபர் அலெக்ஸ் தாம்சனுக்கு புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அலெக்ஸ் தாம்சன்: இலங்கை போரில் புலிகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

செல்வராஜ்யா பத்மநாதன்: எங்கள் இயக்கம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறது. மேலும் அமைதி முயற்சியில் பங்கேற்கவும் தயாராக இருக்கிறது.

அலெக்ஸ் தாம்சன்: போரில் ஈடுபட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

செல்வராஜ்யா பத்மநாதன்: 2 ஆயிரம் பேருக்கு குறைவுதான். அவர்கள் போர் முனையை சுற்றி நின்றுள்ளனர். எங்கள் மக்கள் ஒவ்வொரு மணி நேரமும் நுõற்றுக்கணக்கில் இறந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மட்டும் 3 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கின்றனர். எனவே நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளோம்.

அலெக்ஸ் தாம்சன்: அவர்கள் எல்லோரும் மக்கள் தானா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்

அலெக்ஸ் தாம்சன்: இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

செல்வராஜ்யா பத்மநாதன்: நேற்றிலிருந்து நாங்கள் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுகிறோம். நாங்கள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதி முயற்சியில் பங்கு பெற தயாராக இருக்கிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிவுக்கு வந்து விட்டதா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம் இந்தப் போர் முடிவுக்கு வர விரும்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: புலிகள் கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறப்படுகிறதே?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் கடந்த 38 ஆண்டுகளாக போரை நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் போரில் தினமும் மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. மேலும் 30 ஆண்டுகள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. அமைதியான வழியில் தமிழர்களுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று நம்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: புலிகள் தலைவர் பிரபாகரன் என்ன உத்தரவிட்டிருக்கிறார்?

செல்வராஜ்யா பத்மநாதன்: பிரபாகரனிடம் 4 மணி நேரம் பேசினேன். அவர்தான் இந்த உத்தரவை கூறினார். இது குறித்து இலங்கை அரசிடமும், சர்வதேச சமூகத்திடமும் சொல்லிவிட்டோம். அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை. போரை நிறுத்தவும் இல்லை.

அலெக்ஸ் தாம்சன்: பிரபாகரன் இன்னும் போர் முனையில்தான் இருக்கிறாரா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்.

அலெக்ஸ் தாம்சன்: நீங்கள் போர் முனை பகுதியில் இருக்கும் பிரபாகரனிடம் பேசினீர்களா? அவர் சரண் அடைய தயாராக இருக்கிறாரா?

செல்வராஜ்யா பத்மநாதன்: சரண்அடைய மாட்டார். ஆனால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். சரண் அடைய மாட்டோம்.

அலெக்ஸ் தாம்சன்: மக்களை ஏன் கேடயமாக பயன்டுத்தி அவர்களை வெளியேற விடாமல் தடுக்கிறீர்கள்?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் எப்போதும் மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைக்கவில்லை. மக்கள் எங்கள் சொந்தங்கள். அவர்கள் ராணுவத்தை நம்பாமல் எங்களுடன் இருக்கின்றனர். முகாம்களில் சித்தரவதைப்படுத்தப்படுகின்றனர். எனவே அவர்கள் முகாம்களில் தங்கியிருக்க விரும்பவில்லை. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பாமல் தடுத்து விட்டது. நாங்களாக முன்வந்து 35 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளோம். நாங்கள் மனித கேடயங்களாக மக்களை பிடித்து வைத்திருக்கவில்லை. இது தவறான தகவல். தவறான பிரசாரம்.

அலெக்ஸ் தாம்சன்: ஆனால் இது உண்மையல்ல புலிகள்தான் மக்கள் மீது சுடுகின்றனர். அவர்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர் என்று கூறப்படுகிறதே?


செல்வராஜ்யா பத்மநாதன்: உண்மையில் நாங்கள் அவர்களை சுடுவதில்லை. சில நேரங்களில் ராணுவத்தின் மீது சுடும்போது தவறுதலாக பட்டிருக்கலாம். எங்கள் சொந்த மக்களை நாங்கள் ஏன் கொல்ல வேண்டும்?

அலெக்ஸ் தாம்சன்: புலிகளின் தளபதி ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு புலிகள் ஆயுதங்களை கீழே போட முன் வந்துள்ளதாகவும், சரண் அடைய விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதே?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் சரண் அடைய விரும்பவில்லை. ஆயுதங்களை கீழே போட விரும்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிந்து விட்டதா அல்லது போர் முறை மாறுமா?

செல்வராஜ்யா பத்மநாதன்: போர் ஏறக்குறைய முடிந்து விட்டது அல்லது அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அடுத்த சில மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஆனால் நாங்கள் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம்.

Monday, May 11, 2009

தமிழ் எழுத்துருக்களை யூனிக்கோடு தமிழ் எழுத்துருவுக்கு மாற்றுவது எப்படி?

வலைப்பூவின் சில வாசகர்கள் அறியாத ஒரு தகவல்

வலைப்பூவை வாசிக்கும் பலரும் எழுத்தார்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தடையாக இருப்பது அவர்கள் எழுதும் தமிழ் எழுத்துரு இணையத்தளத்தில் வரமாட்டேன் என்கிறதே? என்ற ஆதங்கம்தான்.
வலைப்பூவை தமிழில் வெளியிடுகிறார்களே? எப்படி ? தமிழில் எழுத முடியுமா? என்று என்னை கேட்கிறார்கள். இணையத்தளத்தில் காணக்கிடைக்கும் எழுத்துருவான யூனிக்கோடுவுக்கு மாற்ற முடியவில்லை என்றும் சிலர் ஆதங்கப்படுகின்றனர். அவர்களுக்காக இதோ டிப்ஸ்

1 நீங்கள் எந்த எழுத்துருவில் வேண்டுமானாலும் தமிழ் எழுதுங்கள். அதை எழுத்து மாற்றியை பயன்படுத்தி அதாவது எழுத்துரு மாற்றி(பாண்ட் கன்வர்ட்டரை) பயன்படுத்தி யுனிக்கோடுக்கு மாற்றுங்கள்.

2. எழுத்துரு மாற்றியை நியூ ஹாரிசன் மீடியா இணையத்தளத்தில் இருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான இணையத்தள முகவரி
இதுதான்: http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx
ஆன் லைனிலும் இதே தளத்தில் சென்று மொழிமாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கான
முகவரி: http://software.nhm.in/Services/NHMConverter/tabid/56/Default.aspx

3. பொங்கு தமிழ் என்ற இணையத்தளத்திலும் ஆன் லைன் எழுத்து மாற்றி இருக்கிறது. அதற்கான முகவரி: http://www.suratha.com/reader.htm

4. தமிழில் வெளியிடுங்கள். எழுத்துக்களை பரப்புங்கள் உலகம் எங்கும். எண்ணங்கள் பரவட்டும். வாழ்த்துக்கள்.

Friday, May 8, 2009

தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டு முடிந்து விட்டது. வெளிவராத சில தகவல்கள்




தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவம் பற்றி பேசுவதே தமிழகத்தில் குற்றம் என்றாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் பற்றி வாயகிழிய பேசும் பத்திரிகையாளர்கள் யாரும் அதுபற்றி பேசவில்லை.

வெளிவராத சில உண்மைகள் பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய தருணத்தில் தி.மு.க.வுக்கு எந்த பத்திரிகையுமே ஆதரவு தரவில்லை. எல்லா பத்திரிகைகளும் அந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலையும் இல்லாத நிலையில் தி.மு.க., ஆதரவை பெருக்க பிரசார பீரங்கியாக பயன்படுத்தவே தினகரன் வாங்கப்பட்டது. திட்டமிட்டது போல தேர்தல் பிரசார பீரங்கியாக செயல்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அப்போதே தயாநிதிக்கும் அழகிரிக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டது. 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இரு தரப்புக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. இது தினகரனில் பணியாற்றிய எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. குறிப்பாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தினகரன் நிருபர்களுக்கு கல்வி துறை பற்றிய செய்தி கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். அந்த அமைச்சரிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ஆமாம் நாங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் என்றும் ஒத்துக்கொண்டார். இதிலிருந்தே அழகிரி, மாறன் சகோதரர்கள் பனிப்போர் இருந்து வந்தது என்பது தினகரன் ஊழியர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது

தினகரனில் தயாரான சர்வே கேள்வி பட்டியல்

திடீரென ஒரு நாள் தினகரனின் மூத்த நிருபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் தினகரன் நிருபர்களிடம் ஒரு தாள் ஒன்றை நீட்டினார். தினகரன் நிர்வாகம் ஒரு சர்வே வெளியிடப்போவதாகவும் கேள்வி என்னமாதிரி கேட்கலாம் என்றும் எழுதி தரக்கூறினர். ஆளாளுக்கு ஒன்று எழுதி தந்தனர். அப்படி எழுதப்பட்டதுதான் வாரி அரசியல் பற்றிய கேள்வியும். இத்தகைய சர்வே இந்த நோக்கத்துடன் வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.

மே மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த சர்வேக்கள் வந்த போது பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதெல்லாம் இதுபற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க.வில் அடுத்த வாரிசு சர்வேயில் ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், கனிமொழி, அழகிரிக்கு 2 சதவீதமும் என வந்த 2007ம் ஆண்டு மே 10ம் தேதி வந்த அதிகாலையிலேயே அழகிரி மதுரையில் இருந்து தன் தந்தைக்கு போன் போட்டு என்னப்பா? என்றார். நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்கல என்றார். ஆனால் அடுத்தது தீவிரம் அதிகரித்தது. மதுரை தினகரன் அலுவலகம் நோக்கி அழகிரி படை சென்று அடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுகள் வீசியது. எம்.வினோத் குமார்(23), ஜி.கோபிநாத்(25), முத்துராமலிங்கம்(42) ஆகியோர் உள்ளே மாட்டிக்கொண்டு பலியாயினர்.
உடனே அங்கே பறந்து வந்த கலாநிதி நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று நாடகமாடினார். அதை நம்பி தினகரன் ஊழியர்கள் ஏமாந்தனர். மே 10ம் தேதி சன்டிவியில் அழகிரி ரவுடி, அழகிரி ரவுடி என்று திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். தமிழ் முரசிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். மறுநாள் தினகரனிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். சன்டிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஜெயாடிவிக்கும் தரப்பட்டது என்பதும் ஊரறிந்த விஷயம்
மே 10ம் தேதி தினகரன் ஊழியர்கள் எல்லோருக்கும் உத்தரவு பறந்தது. காலையில் எல்லோரும் ஆபீசில் இருக்க வேண்டும். கலாநிதிமாறன் வந்து ஊழியர்களிடம் பேசப்போகிறார் என்றனர். ஆனால் ஊழியர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவர் வரவேயில்லை. அப்போதே சில ஊழியர்களுக்கு இந்த பிரச்னை எப்படி போகும் என்று தெரிந்து விட்டது.
மறு நாள் சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். தினகரன் நிர்வாகம் நான் சொல்லியதை கேட்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். இதற்கு தினகரன் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை. இதன் பின்னர் மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் ஏற்படட் பிளவு ஊரறிந்த விஷயம். எல்லாம் சில நாட்களுக்குத்தான்.

தாத்தாதான் சொன்னார்

பிரச்னை குறித்து வார இதழ்கள் கட்டுரை வெளியிட்ட போது. தயாநிதி ஆப் த ரிக்கார்டாக நக்கீரன் நிருபர் ஒருவரிடம் கூறுகையில் சர்வே பற்றிய எல்லா தகவல்களும் தன் தாத்தாவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறினார். பின்னர் பிரச்னை முற்றிய பிறகு தினகரனில் கலாநிதி வெளியிட்ட ஒரு பக்க கடித்திலும் இது குறிப்பிடப்பட்டது. அரசியல் சண்டைகளை தூண்டிவிட்டு குளிர்காயும் முதல்வர் கருணாநிதி தன் குடும்ப சண்டையையும் பின் இருந்து தூண்டிவிட்டாரா? என்று நமக்கு கேள்வி எழுகிறது.
கலைஞர் டிவி தொடங்கியபிறகு, அரசு கேபிள் டிவி வெளியான பிறகு, அரசுக்கு எதிரான செய்திகளை தினகரனில் வெளியிட்டும், சன்டிவியில் ஒளிபரப்பியும் தாத்தா கருணாநிதிக்கு பீதியை பயத்தை ஏற்படுத்தி திரும்பவும் மாறன் சகோதரர்கள் இணைந்து விட்டனர். ரவுடி அழகிரி என்று தினகரனில் செய்தி போடடவர்கள், அழகிரியோடு இணைந்து நிற்கும் படம் வெளியானது.

மவுனம் காப்பது ஏன்?

தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா? குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா?
இன்றுடன் தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது. என் மனதில் நீண்டநாட்களாக தொக்கி நின்ற நினைவுகள் கேள்விகளை கொட்டி தீர்த்து விட்டேன். வலைப்பூ வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Wednesday, May 6, 2009

இலங்கையில் என்ன நடக்குது: முழு தகவல்:ஈழம் பிறக்காலம்: இனம் பிழைக்குமா?










நன்றி: தினமலர் (திருச்சி,வேலூர் பதிப்புகளில் மே 6 ம் தேதி வெளியான முழுப்பக்க கட்டுரை)



25 ஆண்டுகளாக தமிழர்கள் சிந்திய ரத்தத்தால் இலங்கையே சிவந்து கிடக்கிறது. அஹிம்சையை போதித்த புத்தனின் மதத்தை பின்பற்றும் ஒரு தேசத்தில் 1 லட்சம் அப்பாவி மக்கள் மண்ணுக்குள் புதையுண்ட பிறகும் யுத்த வெறி அடங்கவில்லை.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று பாராமல் குழந்தைகள், பெண்கள், முதியோர் என தமிழர்களின் ரத்தம் குடிக்கிறது இலங்கை ராணுவம்.
புலிகளை வேட்டையாடுகிறோம் என்று கூறி கிளிநொச்சியை கைபற்றிய கையோடு முல்லைத்தீவு வரை முன்னேறியது இலங்கை ராணுவம். ஆனால் ராணுவம் தாண்டி சென்ற வழியெங்கும் வீதிகளில் கிடந்தது என்னவோ அப்பாவி தமிழர்களின் பிணங்கள்தான்.
இடிந்து நொறுங்கிக்கிடக்கும் கட்டடங்கள், ஆள் அரவமற்று வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகள், பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களோ, மருத்துவமனைகளோ, வியபார தலங்களோ எதுவும் மிச்சமில்லை. குளித்து பலமாதங்களாகிவிட்டது. எண்ணை காணாத தலையும், உணவு பார்க்காத வயிறுமாக கையில் கிடைத்த சொற்ப உடமைகளுடன் அழுக்கு உடையுடன் நடைபிணமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன தமிழர் குடும்பங்கள்.
புலிகள், உலகநாடுகள், இலங்கை அரசு, அண்டை நாடு இந்தியா, தாய் தமிழகம் என திசைக்கு ஒன்றாக வாக்குறுதிகள்.
அந்த அப்பாவிகள் மனதில் யாரைத்தான் நம்புவதோ என்ற விடை தெரியாத அரசியல் புரியாத ஏக்கம். இலங்கை தமிழர்கள் என்ன பாவம் செய்தனர். அவர்கள் கடந்து வந்த வழி என்ன?



யார் இலங்கை தமிழர்?

இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் பற்றித் தெளிவான சான்றுகள் இல்லை. மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு நுவலில் இலங்கை வம்சாவழித் தமிழர்கள் பற்றி சிறிதளவுதான் கூறப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் பௌத்த மதம், சிங்களவர் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இலங்கையை ஆண்ட விஜயன் காலத்தில் திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகள் இருந்தது என்பது தெளிவாகிறது.

இது தவிர கி.மு. நுவற்றாண்டில் அனுராதபுரத்தை பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சத்தின் குறிப்புகளில் காணப்படுகிறது. முன்பு புகழ்பெற்ற துறைமுகமாக இருந்த மாந்தோட்டத்தில் தமிழக வணிகர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பது பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு 5ம் நுவற்றாண்டிலிருந்து கி.பி 10ம் நுவற்றாண்டு வரை இலங்கை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தில் தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இப்போதைய யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடும் என யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.ராசநாயக முதலியாரின் கருத்து.
அனுராதபுரம், பொலநறுவை சிங்களர் அதிகாரம் வீழ்ந்து தெற்குநோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ் சிங்கள குடியேற்ற மாறுபாடு தீவிரப்பட்டிருக்கும்.
தமிழர் குடியேற்றம் பற்றிய செய்திகள் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் உள்ளது. ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை தமிழர்கள் பொதுவாக 2 பிரிவினராகக் கருதப்படுகினறனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், அப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழி தமிழர் எனப்படுவர்.
இன்னொரு பிரிவினர் இங்கிலாந்து ஆட்சி காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்களில் பணியாற்ற வந்தனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இன்றும் தோட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை அரசின் புள்ளிவிரவங்களில் இவர்கள் இந்தியத் தமிழர் என்றே குறிப்பிடப் படுகிறார்கள்.


இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948


இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948 கொண்டுவரப்பட்டது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் இலங்கை பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாட்டுக்கு தேவை என்று தோன்றும். ஆனால் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழர்கள் என்றழைக்கப்பட்டவர்களை தோட்டத் தொழிலாளான லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தது. இதன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் சிங்கள அரசு வெற்றிபெற்றது.
இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது. இச் சட்டம் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டபோது இலங்கைத் தமிழ் எம்.பி.,க்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.



தனிச் சிங்களச் சட்டம்


தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் இலங்கை ஆட்சி மொழிகள் மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.எனினும் நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அரச சேவைகளை தமிழ் மொழியில் இல்லை. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி
சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.
எஸ். டபில்யு. ஆர். டி பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசில் 1956ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலங்கை பார்லி.,யில் ‘சிங்களம் மட்டுமே அரச மொழி‘ என்ற தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசுப்பணியில் உள்ள தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் இதை எதிர்த்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக இது கருதப்படுகிறது.



ஆரம்பித்தது போர்

இலங்கை அரசின் ஒரு தலைப்பட்சமான பல நடவடிக்கைகளால் உள்ளுக்குள் இருந்த பகை 1980களில் பெரும் போராட்டமாக வெடித்தது.பல கால கட்டங்களில் ராணுவத்துக்கு எதிராக தமிழ் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. ராணுவத்தின் வெறி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் புலிகள் தொடங்கினர். பல தன்மைகளுடனும் தாக்கங்களுடனும் இனமோதல் வெளிப்பட்டு இருக்கின்றது. மோதலின் முக்கிய திருப்புமுனைகளைக் கொண்டு இலங்கை மோதலை 4 கட்டங்களாக கூறுகின்றனர்.

* ஈழப் போர் 1: (1983-1985; 1987) ஈழ இயக்கங்கள், புலிகள் ஒரு அணியாகவும், இலங்கை ராணுவம், இந்திய அமைதி காக்கும் படை எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 2: (1990-1995) - புலிகள் ஒரு அணியிலும் இலங்கை ராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள் எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 3: (1995 - 1999) - புலிகள் ஒரு அணியிலும் எதிரணியில் இலங்கை ராணுவமும் இருந்தது.
* ஈழப் போர் 4: (2006 - ) - புலிகள் ஒரு அணியிலும் எதிர் அணியில் இலங்கை ராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. இந்த போர் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது.



இறுதி போர்


இலங்கை போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.உலகில் சமீபகாலமாக நடந்த இனமோதல்களில் இந்த அளவுக்கு ஒரு இனம் அழிக்கப்பட்டதில்லை என்பது உலக பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே திட்டமிட்டு செயல்படுகிறார்.
நார்வேயின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத்தை இலங்கை அரசு முறித்துக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து 2008ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மோதல் தீவிரம் அடைந்தது. 2008ம் ஆண்டு இறுதிக்குள் புலிகளை ஒழித்தே தீருவோம் என்று ராஜபக்சே முழக்கமிட்டார். புலிகளை கொல்வதாக கூறி இலங்கை ராணுவம் தினந்தோறும் தமிழர்களை கொன்று குவித்து முன்னேறியது.

அழிந்த நகரம்

புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரை ராணுவம் கைபற்றியதாக ராசபக்சே இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி அறிவித்தார். கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக புலிகளின் வசம் இருந்த யானையிறவு கைபற்றப்பட்டது.
இரண்டு முக்கிய பகுதிகளை இழந்த புலிகள் முல்லை தீவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்தனர். இருந்தும் விடாமல் ராணுவம் துரத்தியது. ராணுவத்தின் முப்படைகளும் முல்லை தீவை சுற்றி வளைத்து தாக்கின. அடுத்த 20 நாட்களில் அதாவது ஜனவரி 25ம் தேதி புலிகளிடம் இருந்து முல்லை தீவை கைபற்றி விட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. புலிகளுக்கு எதிரான போரில் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டனர்.



பட்டினி எனும் ராஜ தந்திரம்

கடந்த 3 மாதமாக தொடரும் மோதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் ரகசிய அறிக்கை அதர்ச்சி தகவல் கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு இலங்கை அரசு போரை நிறுத்துவதாக இல்லை. மேலும் போரை தீவிரப்படுத்துவதில்தான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது. தமிழர்களை புலிகள் மனித கேடயமாக பிடித்து வைத்துள்ளனர் எனவே தான் ராணுவம் முன்னேற முடியவில்லை என்று அப்பாவி தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர் போல ராஜபக்சேவும் அவரது ராணுவமும் தெரிவித்தது. ஆனால் உண்மையில் தமிழர்களை வரவழைக்க மோசமான தந்திரத்தை ராணுவம் கடைபிடித்தது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உணவுப்பொருள் அனுப்புவதை இலங்கை அரசு அறவே நிறுத்தி விட்டது. முல்லை தீவில் காட்டுக்குள் வாழ்ந்த தமிழர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். தண்ணீரை குடித்து வாழலாம் என்றால் கடல் பகுதியில் எல்லாம் உப்பு தண்ணீர். மழை பெய்ததால் தேங்கி கிடந்த தண்ணீரை தெளியவைத்து குடித்தனர். இதனால் தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்தது. ரெட் கிராஸ், ஐநா உள்ளிட்ட அமைப்புகள் இந்த கொடூரத்தை வன்மையாக கண்டித்தன. ஆனால் ராணுவம் அசைந்து கொடுக்கவில்லை.
திடீரென தமிழ் புத்தாண்டுக்காக போர்நிறுத்தத்தை அறிவித்தார். உண்மையில் சிங்கள படையினர் இறுதி தாக்குதலை மேற்கொள்ளும் முன்பு கொஞ்சம் இளைப்பாறுவதற்காக கொடுக்கப்பட்ட தற்காலிக நிறுத்தமே அது.
ராணுவத்தினரை உற்சாகப்படுத்த இந்த லீவு நாளில்தான் அவர்களுக்கு விருந்தளித்தார் ராஜபக்சே. அவர் விருந்து சாப்பிடும் நேரத்தில் தமிழர்கள் சாப்பிட்டு 13 நாட்கள் ஆகியிருந்தது. பல குழந்தைகள் பசியால் உயிரை விட்டன. சரியான சரிவிகித உணவு உண்ணாமல் தமிழ் தாய்களின் மடியில் பால் வற்றிப்போனது. பால் குடிக்காத குழந்தைகள் உயிர் விட்டன.
2 நாள் நிறுத்தத்துக்கு பிறகு புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு ராணுவம் தாக்கத்தொடங்கியது. இந்த தாக்குதலை வீடியோவில் பார்த்து ரசித்தார் ராஜபக்சே. பசியால் குழந்தைகளை இழந்த நுவற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் எங்கு சென்றால் பசி போக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் அதை தந்திரமாக பயன்படுத்தியது ராணுவம். பசியால் துடித்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். வீடியோவை பார்த்து தன் தந்திர கணக்கை தானே பாராட்டிக்கொண்டார் ராஜபக்சே. இது வரை ஒன்றை லட்சம் தமிழர்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அரசு கணக்கு கூறுகிறது.


தமிழர்கள் எதிர்காலம்?


வன்னியில் 4 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். ராஜபக்சே அரசின் கொடூர ராணுவ தாக்குதல்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுதவிர ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை ராணுவத்தினர் பிடித்துள்ளனர். அவர்களில் 63 ஆயிரம் பேர் மட்டும் அரசின் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதி 77 ஆயிரம் பேர் எங்கே என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? புலிகளின் கட்டுப்பாட்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்தனர். இப்போதைய வெளியேற்றத்தில் ஒன்றரை லட்சம் பேர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். ராணுவத்தினர் கைபற்றிய பகுதிகளில் பல இடங்களில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ராணுவத்திடம் இருந்து தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். இவை தமிழர்களை மொத்தமாக கொன்று புதைக்கப்பட்ட குழிகளா? என்பதும் வேதனைக்குரிய விஷயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி., சதாசிவம் கனகரத்தினம் இது குறித்து பார்லி.,யில் கேள்விகள் கேட்டபோது இலங்கை அரசால் பதில் சொல்லமுடியவில்லை.



திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்

ஆரம்பத்தில் இருந்தே தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் நடந்து வருகிறது. அதாவது நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழர்களின் உரிமைகளை பறிக்க வில்லை என்று முந்தைய அரசுகள் கூறி வந்தன. ஆனால் அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதுதான் உண்மை.
இப்போது இலங்கை அரசு கைபற்றிய கிளிநொச்சி, யானையிறவு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் இதே பாணியில்தான் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட உள்ளனர். ஆனால் மீண்டும் தமிழர்களை குடியேற அனுமதிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் கோரிக்கை. இலங்கை அரசோ இப்போதைக்கு தமிழர்களை முகாம்களில் தங்க வைப்பதாக சொல்கிறது. ஆனால் நிரந்தரமாக தமிழர்களை முகாம்களிலேயே முடக்கி விட்டு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியேற்றுவதுதான் ராஜபக்சேவின் திட்டம் என்பது உலகறிந்த விஷயம். இதன் மூலம் தமிழர்களின் மரபுவழி நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் திட்டம் நடந்து வருகிறது.





கருவில் இன அழிப்பு

தமிழர்களை முற்றிலும் அழுத்தொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு போர் மட்டுமின்றில பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு ராணுவ உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் கர்ப்பிணிப் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்கள மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.
இது தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கை இலங்கை தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலாகும்.


குறையும் தமிழினம்

இலங்கை மக்கள் தொகையில் சிங்களர்களுக்கு அடுத்து இரண்டாவது பெரிய இனமாக தமிழர்கள் இருந்தனர். அதாவது மக்கள் தொகையில் 12 சதவீதத்தினர் தமிழர்கள் இருந்தனர். ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பு 12 லட்சம் தமிழர்கள் இருந்தனர். ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது குறைந்து 3.9 சதவீதமாக ஆகிவிட்டது. 1983ம் ஆண்டில் இருந்து தொடங்கிய தமிழின அழிப்பில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

Tuesday, May 5, 2009

பிளாஷ் நியூஸ்: தமிழகத்தில் சோனியா பிரசாரம் இல்லை: தமிழர் பிரச்னை பற்றி பேச தயக்கம்


இலங்கை தமிழர்கள் ரத்தம் சிந்துவது பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காத சோனியா தமிழகத்தில் எப்படி பிரசாரம் செய்வது என்று தயங்கிக்கொண்டிருந்தார். முதல்வர் கருணாநிதியும் எப்படி சோனியாவுடன் ஒரே மேடையில் உட்கார்ந்திருப்பது என்று தயங்கி கொண்டிருந்த வேளையில் உடல் நலத்தை காட்டி அப்பல்லோ மருத்துவமனையில் ரெஸ்ட் எடுக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா களத்தில் எதிரியே இல்லாமல் 39 தொகுதிகளிலும் கலக்கி வருகிறார். அ.தி.மு.க.,வென்றால் நான் சொல்லும் மத்திய அரசு இலங்கையின் மீது போர் தொடுத்து தனி ஈழத்தை ஏற்படுத்தும் என்று முழங்குகிறார். அவருக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத காங்., தி.மு.க., கூட்டணி என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தது. எத்தனை நாளைக்குத்தான் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி புலி புலி என்று புலம்புவது. புலி பிரசாரம் எடுபடாத நிலையில் பிரசாரத்துக்கு தமிழகம் வந்து அவமானப்படுவதை விட வராமல் இருப்பதே மேல் என்று கருதி விட்டார்.
தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்னை கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சோனியா தமிழகம் வருவது அவ்வளவு நல்லதாக இருக்காது. ஒரு வேளை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு பேட்டி அளித்து விட்டு பின்னர் வரலாம் என்று மத்திய உளவுத்துறை சோனியாவுக்கு ஆலோசனை கூறியது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா? அதெல்லாம் பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதாக டில்லி தகவல் ஒன்று கூறுகிறது.
13ம் தேதிக்கு முன்பே அல்லது 16ம் தேதி முடிவு தெரிவதற்கு முன்பே ஆளும் வர்க்கத்தின் தோல்வி முகம் வெளுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. உண்மையை, தமிழர்களின் உணர்வை மதிக்கத்தெரியாத, அவர்களின் கண்ணீரை துடைக்காத கோழைகளாக மாறிவிட்டவர்கள் இவர்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்வது? சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
வேறு ஒரு நாளில் சோனியா பிரசாரம் செய்வார் என்று அறிவித்திருக்கின்றனர்.பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் உள்ள ஓட்டு மொத்த தமிழர்களையும் சிறை வைத்து விட்டு யாரு மற்ற பரந்த மைதானத்தில் யாரை பார்த்து உரை நிகழ்த்தப்போகிறார் என்று தெரியவில்லை. அல்லது தமிழகத்துக்கு நேரே விண்வெளியில் மேடை போட்டு பேசப்போகிறாரோ என்னவோ தெரியவில்லை. எதிர்காலத்தில் காங்கிரசுக்கு தமிழகத்தில் முகம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

Saturday, May 2, 2009

இன்று பத்திரிகை சுதந்திர தினம்:தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?


ஊடகச் சுதந்திரம் என்பது மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரமான ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.
சர்வதேச அளவில் ஊடகச் சுதந்திரம் இருக்கிறதா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு வருவோம். இந்த கேள்விக்கு வலைப்பூ வாசகர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை ஊடகச் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
ஊடகச் சுதந்திரம் என்பது முதல்வர் கருணாநிதியை சுற்றித்தான் இருக்கிறது. அவரை பற்றி அவருடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் ஊடகச் சுதந்திரம் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
மீறி யாராவது விமர்சனம் செய்தால் கருணாநிதி எதிர் கட்சி வரிசையில் இருந்தாலும் நேரடி விவாதம் நடந்து கொண்டிருக்கும் ஸ்டுடியோவுக்கு போன் போட்டு திட்டுவார்(உதாரணம்: விஜய் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விவாதத்தை வழி நடத்திய கோபியை போனில் விரட்டியதை யாரும் மறந்து விட முடியாது) இதுதான் ஊடகச் சுதந்திரம்.
தினகரனில் கருணாநிதி ஆசியுடன் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புக்கு தினகரன் ஊழியர்களே எரிக்கப்படுவார்கள். இதுவும் கருணாநிதி ஆட்சியில் நிகழ்ந்த ஊடகச் சுதந்திரத்துக்கு எடுத்துக்காட்டு.
கருணாநிதி திட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டு எதிர்கட்சிகளின் பேட்டியைக்கூட அடக்கி வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன. வாழ்க ஊடகச் சுதந்திரம். இலங்கை தமிழர்களின் உணர்வுகளை பலிகளை செய்தியாக்காமல் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி விட்ட, ஒரு காலத்தில் உண்மை செய்திகள் என்றால் நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொண்ட இந்து பத்திரிகையின் சுதந்திரம். வாழ்க ஊடகச் சுதந்திரம்.
ஜெயலலிதாவிடம் மட்டும் வீரம் காட்டும் நக்கீரன் கோபாலின் பத்திரிகை சுதந்திரம் வாழ்க
இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்.
பழைய உதாரணங்களில் ஊடகச் சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. பிரபல தமிழ் வார இதழான தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கரார் ஜெயலலிதாவை படம் எடுத்தார் என்ற குற்றத்துக்காக ஒரே நாள் இரவில் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இது போன்று ஜெயலிதா ஆட்சியில் எண்ணற்ற ஊடகச் சுதந்திர மீறல்கள். இந்து பத்திரிகை வட்டாரத்தையே கதிகலங்க அடித்தவர். அதன் நிருபர் ராதா வெங்கடேசனை ஓட ஓட விரட்டி துரத்தினார் ஜெயலலிதா. அப்போது ஊடகச் சுதந்திரம் மீறப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குரல் கொடுத்தனர்.
அந்தந்த ஆட்சியாளர்களுக்கு ஒத்துப்போவதுதான் ஊடகச் சுதந்திரம். வாழ்க மேலும் வளர்க

Friday, May 1, 2009

தமிழக வேட்பாளர்களின் கிரிமினல் பட்டியல் எங்கே?


உ.பி.,யில்தான் கிரிமினல் வேட்பாளர்கள் அதிகம், பீகாரில் அதிகம் என்று தேர்தல்களம் 2009 பக்கத்தில் தமிழ் பத்திரிகைகள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் பற்றி இந்த பத்திரிகைகள் கண்டு கொள்ளாதது ஏன். வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும் அன்றைய தினமே தொகுதி தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் தகவல்களை சேகரித்து பகிரங்கப்படுத்தும் வேலையில் இருந்து தமிழ் பத்திரிகைகள் நழுவியது ஏன்? அல்லது செய்தியாளர்கள் திரட்டிக் கொண்டு வந்து கொடுத்த தகவல்களை வெளியிட ஆசிரியர், முதலாளிகளுக்கு என்ன தயக்கம்?
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பிண்ணனி என்ன என்பது தெரியாமலேயே வாக்காளன் ஓட்டுப்போட வேண்டுமா? வேட்பாளர்களின் குற்ற நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளத்தானே இந்த மாதிரி ஒரு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தெரிவிப்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏன் அச்சம் என்று யாருக்குமே புரியவில்லை.
இந்த பட்டியலில் தென் மாவட்டத்தை ஆளும் தி.மு.க. புள்ளியின் பெயரும் இடம் பெற வேண்டியிருக்கும் அதனால் நமக்கேன் வம்பு என்று பத்திரிகைகள் கருதுகின்றனவோ. அதுவாகத்தான் இருக்கும். வேறு என்ன இருக்கப்போகிறது. ஒருவரின் பட்டியலை வெளியிட வேண்டியிருக்குமே என்பதற்காக யாருடைய தகவல்களையும் வெளியிடாமல் இருப்பது என்னநியாயம்? தகவல் அறியும் உரிமை சட்டம் என்று இருக்கிறது. பத்திரிகைகள் வெளியிட மறுக்கும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கு என்ன செய்வது? ஏன் இந்த மூடி மறைப்பு?
இது ஒரு புறம் இருக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையத்தளத்தை பார்த்தபோது அதிலும் வேட்பாளர்களின் குற்றப்பட்டியல் இல்லை. வேறு சில மாநிலங்களில் எல்லாம் இந்த தகவல் உடனுக்குடன் அப் லோட் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை? நரேஷ்குப்தா சொல்லத்தான் முடியும். தேர்தல் பணியாற்றுகின்றவர்கள் மாநில அரசு அதிகாரிகள் தானே? ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொடுத்த அபிடவிட்டை ஸ்கேன் செய்து அப் லோட் செய்ய எவ்வளவு நேரமாகும். ஏன் இந்த தாமதம்? சரி 13ம் தேதி காலை 8 மணிக்குள்ளாவது இந்த தகவல்களை தேர்தல் இணையத்தளத்தில் பார்க்கலாமா? அல்லது அதற்குள்ளாவது பத்திரிகைகள் பட்டியல் வெளியிடுமா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

Thursday, April 30, 2009

பஸ் கட்டண குறைப்பு மற்றும் ஒரு நாடகம்




பிரசார களத்தில் தி.மு.க.,வுக்கு பேசுவதற்கு பொருள் இல்லை. அல்லல்படும் இலங்கை தமிழர் பற்றி பேசினால் சோனியா கோபித்துக்கொள்வார் எனவே அது பற்றி பேசமுடியாது. மக்கள் பிரச்னைகளுக்கு இந்த 3 ஆண்டுகால தி.மு.க., அரசின் வேதனை கலந்த சாதனைதான் காரணம். அதை பற்றியும் சொல்லமுடியாது. அதை செய்தோம் இதை செய்தோம் என்று பட்ஜெட் புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்க முடியும்.
தமிழக உளவு துறை அதிகாரிகள் எடுத்த ரகசிய சர்வேயில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மண்ணை கவ்வுவது நிச்சயம் என்று ரிப்போர்ட் கொடுக்கப்படுகிறது. அதில் முக்கிய பிரச்னையாக பஸ் கட்டண உயர்வும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பஸ் கட்டண உயர்வு குறித்து எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அது அதிமுக ஆட்சியில் செய்தது. நாங்கள் புதிதாக எதுவும் செய்ய வில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் நேரு அரசு உத்தரவுகளை எடுத்துக்காட்டி பதில் சொன்னார். எனவே போராடி போராடி அல்லது அடுத்தடுத்து வேறு பிரச்னைகள் வந்ததால் பஸ் கட்டண உயர்வையே பலரும் மறந்து விட்டனர். இந்த நிலையில்தான் பஸ் கட்டண குறைப்பை அறிவித்திருக்கின்றனர்.
உளவு துறை தந்த அதர்ச்சி அறிக்கைகள். இன்றைய தினம் முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்யும் முன்பாவது மக்களை குளிர்விக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த திடீர் கட்டண குறைப்பை அரசு செய்திருக்கிறது. விதி முறை மீறல் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரல் சுட்டியிருக்கிறார்.
பஸ் கட்டண குறைப்பை நாம் நம்ப போகிறோமோ நம்பி ஓட்டுப்போடப்போகிறோமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. மிச்சமிருக்கிற 13 நாள் நாடகத்தில் இதுவும் ஒரு கபட நாடகம். இலங்கை தமிழர்களை ஏமாற்ற பந்த், உண்ணாவிரத நாடகங்களை செய்த கருணாநிதி, பஸ்கட்டண குறைப்பு நாடகத்தையும் செய்திருக்கிறார். இன்னும் சில நாட்கள் இது போன்ற நாடகங்கள் தொடரலாம். நாடகத்தை நாடகமாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். மற்றபடி ஓட்டுப்போடுவதற்கு முன்பு சிந்தியுங்கள்.

Wednesday, April 29, 2009

லேட்டஸ்ட் நியூஸ்:பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ்


இருவர் படத்தில் நடித்து கருணாநிதியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் இப்போது புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட பத்திரிகையாளர்கள் அசோசியேஷனில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் ஹாயாக பேசிக்கொண்டிருந்த போது நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த தகவலை கூறியிருக்கிறார்.
நடிப்பது என்பது எனக்கு ஒரு பயணம் செய்வது போல.நடிப்பதால் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்வதன் மூலம் அதுபற்றி நிறையபேரிடம் பேசலாம். அனுபவங்கள் மூலம்தான் எந்த ஒரு நடிகரும் நம்பிக்கைகையும், நடிப்பில் முதிர்ச்சியும் பெற முடியும் என்று நான் கருதுகிறேன்.
புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்ப பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பம் தெரிவித்துள்ளேன்.
மற்றபடி இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாகரன் தோற்றத்தை காப்பியடிக்க விரும்பவில்லை. அவர் நிஜத்தில் எப்படி இருப்பார், எப்படி பேசுவார் என்று தகவல்களை சேகரிக்கவில்லை. இயற்கையாக அவரைப் போன்று நடிப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று ரகசியம் காத்தார்.
அவர் ரகசியம் காப்பது நல்லதுதான். ஏற்கனவே செல்வமணி எடுத்த குற்றபத்திரிகைக்கு நேர்ந்த கதி எல்லோரும் அறிந்தஒன்றுதான்.

எக்ஸ்குளூசிவ்:சென்னை ரயில் விபத்து: புலிகளை தொடர்பு படுத்த முயற்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன் அதிகாலை ஒரு மின் ரயிலை எடுத்துக்கொண்டு கிளம்பிய மர்ம மனிதர் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலில் பலமாக மோதினார். அவரும் பயணிகள் 3 பேரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர். இதற்கு காரணமான நபர் யார்? என்பதை ஆராயாமல் இந்த வழக்குக்கு மே 13ம் தேதி வரை ஒரு புதிய கதை எழுத ஆளும் வர்க்கம் தயாராகி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சிபிசிஐடி விசாரணைக்கும் இந்த வழக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே இந்த வழக்கு திசைமாறி செல்ல வாய்ப்புள்ளது என்று கமிஷன் ஆபீஸ் நிருபர் ஒருவர் கூறுகிறார்.
அரசுக்கு பிடிக்காதவர்களை வழக்கில் கொண்டு வருவதற்காகத்தான் சிபிசிஐடி இயங்குகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் உண்மையை மூடி மறைத்து புலிகளை சம்பந்தப்படுத்தி ஜெயலிதாவின் பிரசாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியில் தமிழக காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இந்த விபத்து குறித்து நுணுக்கமாக கண்டறிய வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக்கிறார். எனவே அடுத்த சில நாட்களில் புலிகளை தொடர்பு படுத்தி காட்சிகள் அரங்கேறலாம்.

Sunday, April 26, 2009

சற்று முன் கிடைத்த தகவல்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம்: தமிழர்களின் இன்னல் தீருமா?


தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில்இலங்கை தமிழர்கள் இன்னல் போக்காமல்பிரசாரத்துக்கு கிளம்ப முடியாது என்றுகருணாநிதிக்கு நன்றாக தெரிந்து விட்டது. தன்அரசியல் எதிரி ஜெயலலிதா திடீரெனதன்நிலையில் இருந்து கீழிறங்கி தனிஈழத்துக்கு ஆதரவு என்று அறிவித்தது சர்வதேசஅளவில் வரவேற்பை பெற்றிருப்பதுகருணாநிதியின் வயிற்றில் புளியைகரைத்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் முதல்இரண்டு கட்டங்கள் காங்கிரஸ் கூட்டணிக்குசாதகமாக இல்லை என்று வந்த உளவுசெய்திகள் ஒருபுறம் இருக்க இனி மிச்சம்இருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலாவது எதையாவது செய்துவெற்றியை தக்க வைக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் சித்திரைவெயிலில் மண்டையை குழப்பிக்கொண்டிருக்கின்றர். தமிழகத்திலும் அவ்வளவுசாதகமாக இல்லை என்று சோனியாஜிக்கு தெரிந்தாலும், புலிகளை ஒழித்தே தீரவேண்டும் அதற்கு எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை. தன்னுடையஅசைண்ட்மென்டை ராஜபக்சே முடிக்க வேண்டும் என்று அவரது மனதுக்குள்ஒரு எண்ணம் ஓடுகிறது. மூத்த தலைவர் கருணாநிதிக்கும் இந்த எண்ணம்தெரியாமல் இல்லை. இலங்கை விவகாரம் அவ்வளவு பெரிதாகாது. நாங்கள்பார்த்துக்கொள்கிறோம் எங்களிடம் மீடியா பவர் இருக்கிறது என்று பேரன்கள்கொடுத்த வாக்குறுதியை பெருசு நம்பினார். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு போய்தன்னுடைய பரம வைரியே தனி ஈழத்துக்கு குரல் கொடுக்கும் அளவுக்குமுன்வந்ததும் அதற்கு எல்லைகளை தாண்டி ஆதரவு பெருகியதும் கடந்த 2 நாட்களாக அவரை தூக்கம் இழக்க செய்து விட்டது. அதன் விளைவே இந்த திடீர்உண்ணாவிரதம். எவ்வளவு அரசியல் மாச்சர்யங்கள் இருந்தாலும் தமிழர்களின்இன்னல் தீர்க்க கடைசி பட்ச ஆயுதமாக முதல்வர் கருணாநித உண்ணாவிரதஅஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதை பாரட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒருமூத்த அரசியல் வாதியை அவரது வயது கருதி அவரின் கோரிக்கையைநிறைவேற்றும் வகையில் சோனியாஜி தனது வன்ம நிலையில் இருந்து இறங்கிவந்து ராஜபக்சேயின் அலை பேசியில் கூப்பிட்டு, நிறுத்தடா போரை என்றுஉத்தரவிடுவாரா? என்பதுதான் உலகமெங்கும் இருக்கும் அப்பாவி தமிழர்களின்ஒரே கேள்வி. அப்படி நடந்தால் முதல்வரின் உண்ணாவிரதத்தை பாராட்டுவோம். சீக்கிரம் அவர் உண்ணாவிரதம் முடியவும் தமிழர்கள் பிரார்த்திக்க வேண்டும். அவரது உண்ணாவிரதம் நாடகமா? என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

இலங்கை நிலவரம்:மூடி மறைக்கும் பத்திரிகைகள்

இலங்கையில் நித்தம் நித்தம் செத்தும் மடியும் தமிழர்களை கண்டு எல்லையின்றி சர்வதேச சமுதாயமே கண்ணீர் வடிக்கிறது. தமிழகத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தங்களின் அரசியல் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தில் பேனாவில் நஞ்சை கலந்து எழுதுகின்றனர்.
இலங்கை போர் பற்றி செய்திகளை பல தமிழ் பத்திரிகைகள் வேதனை கலந்த வார்ததைகளால் பிரபல தமிழ் பத்திரிகைள் வெளியிட்டு வரும் நிலையில் கலைஞரின் பேரன் கொள்முதல் செய்த தினகரன் பத்திரிகை மட்டும் பாராமுகமாக செய்தி வெளியிட்டு வருகிறது. சன் தொலை காட்சியும் பாராமுகமாக இருந்து வருகிறது.தமிழகத்தின் அருகில் கேட்கும் அழு குரல் கூட அவர்களுக்கு கேட்கவில்லையே என்று எண்ணும் போது அவர்கள் பத்திரிகையை வாங்கி படிக்கலாமா என்று எண்ணத்தோன்றுகிறது.

Thursday, April 23, 2009

இதுவா இலங்கை தமிழர் நலன்?

தமிழர்கள் ரத்தம் சிந்தப்படுவது நிறுத்தக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்த பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சரி இந்த வேலை நிறுத்தத்தால் எத்தனை பேருக்கு தமிழுணர்வு கிளர்ந்தது. அல்லது அந்த தமிழர் உணர்வை தட்டி எழுப்பினார்களா? என்றால் இல்லை. கலைஞர் புகழ் பாடும் கலைஞர் டிவியும், அவரின் பேரன்கள் நடத்தும் சன்டிவியும் பந்த் நாளை விடுமுறை நாளாக கருதி திரைப்படங்களை ஒளிபரப்பின.
சமீபகாலமாக அப்பாவி மக்கள் பலியாவதைக்கூட பதிவு செய்ய மறுத்த இந்த தொலைக்காட்சிகளின் தமிழ் உணர்வு ஏன் இவ்வளவு கீழ்தரமாக மாறியது. பந்த் எதற்காக நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என்ன? என்பதை செய்தி கட்டுரையாக்கூட இந்த சேனல்கள் வழங்க முன்வராதது ஏன்? இலங்கை தமிழர்கள் இன்னல்களை ஒளிபரப்பினால் சோனியாஜி கோபித்து கொள்வார் என்பதாக இருக்குமோ?
இந்த வேலை நிறுத்தத்தை வழக்கம் போல் அ.தி.மு.க.,கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. பிரசாரத்தை தடுக்கவே கருணாநிதி வேலை நிறுத்தம் அறிவித்தார் என்று மதுரையில் ஜெயலலிதா முழங்கினார். முன்பு இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி நைட்டி அனுப்பியபோது அதை கிண்டல் செய்தவர்தான் ஜெயலலிதா என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது. எல்லாம் தேர்தல் செய்கின்ற மாயம். ஒரே ஒரு ஆறுதல் தேர்தல் வரும் பொழுதாவது இலங்கை தமிழர்களின் ஞாபகம் வருகிறதே அந்த வகையில் அவர்களின் ஞாபக சக்தியை பாராட்டலாம். மற்றபடி அவர்களின் இன்னல்களை போக்கும் அளவுக்கு எந்த தமிழக தலைவருக்கும் திராணிஇல்லை. சக்தியில்லை. வெட்கம் இல்லை.

Sunday, April 12, 2009

கிங்மேக்கர் காமராஜர்


ஒரு காலத்தில் மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக விளங்கிய காமராஜர் விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் தம்பதியின் மகனாக 1903ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் அவருக்கு சூட்டினார்கள். ஆணாகப் பிறந்த காமராஜரை காமாட்சி என்று அழைத்தனர். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ராஜா என்று அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது. சத்ரிய வித்யா சாலா பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். படிக்கும் போது மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். தந்தை குமாரசாமி நாடார் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். காமராஜருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். 6ம் வகுப்புக்கு பின்னர் பள்ளிக்கும் செல்லவில்லை. தன் மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். மாலை நேரங்களில் விருது நகரில் நடக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வார். 16வது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார்.
ஆங்கிலேயே அரசின் உப்பு வரி விதிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் போராட்டம் நடந்தது. வேதாரண்யத்தில் நடந்த போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வழக்குக்காக வேலூர் சிறையில் இருந்த போது விருதுநகர் முன்சீப் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைவர் பதவி வகிக்க விருப்பம் இல்லை என்று கூறி ராஜினாமா செய்து விட்டார். ஒரு கட்டத்தில் காங்., பொது செயலளாராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். பெருந்தலைவர் என்ற பெயரையும் பெற்றார். காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்து விட்டார். இதனால் தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் கனவு இன்று வரை நிறைவேறாமலேயே போனது. இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியை பதவியில் அமர்த்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் காங்., ஆட்சியே தலையெடுக்கவில்லை. காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று இன்றைக்கு காங்., தலைகள் முழங்கி கொண்டே இருக்கின்றன. முழக்கத்தோடு சரி. திராவிடகட்சிகளுக்கு வால் பிடிக்க மட்டும்தான் காங்கிரஸ் என்பதுதான் நிதர்சன உண்மை.

டைட்டானிக் சாவி ஏலம் (1912 ஏப்ரல் 14 டைட்டானிக் மூழ்கிய தினம்)


லண்டன்,ஏப்ரல் 12:
டைட்டானிக் கப்பலில் இருந்த அறை ஒன்றின் துருப்பிடித்த சாவி லண்டனில் 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்ஆம்டன் துறைமுக நகரில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் கப்பல் ஊழியர்கள் உட்பட 2ஆயிரத்து 233 பேருடன் புறப்பட்டது.
நியூபவ்ண்ட் லேண்ட் தீவுக்கு அருகில் கடலில் சென்று கொண்டிருந்த போது வானிலை மாற்றத்தால் அந்த பகுதியில் உறைபனி ஏற்பட்டது. இதனால் பனிப்பாறையில் மோதி 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில் டைட்டானிக் மோதியதில் கவிந்தது. நள்ளிரவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த பலர் என்ன நடக்கின்றது என்று தெரியாமலேயே ஆயிரத்து 517 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிர்பிழைத்தவர்கள் 706 பேர் மட்டுமே.
இந்த சோகம் நடந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் டைட்டானிக் கப்பல் அறை ஒன்றின் சாவி லண்டனில் ஏலத்துக்கு வருகிறது.
டைட்டானிக் முதல் வகுப்பு அறையின் ஊழியர் எட்மண்ட் ஸ்டோன் என்பவர் கப்பல் மூழ்கிய போது பயணிகளை காப்பாற்ற முயற்சித்தார். இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்ட தபால் பைகள் மாடியில் இருந்த ஒரு அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மாடிக்கு செல்லும் கதவு மூடப்பட்டிருந்தது. அந்த கதவை திறந்து விட்டால் நிறையப்பேரை காப்பாற்றலாம் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. தன்னிடம் இருந்த சாவியால் அந்த கதவை திறந்து விட்டார். பின்னர் அந்த வழியே தப்பித்து செல்லும் படி பயணிகளிடம் கூறினார். அதன் படி பல பயணிகள் தப்பித்தனர். ஆனால் என்ன பரிதாபம் எட்மண்ட் ஸ்டோனால் தப்பிக்க முடியவில்லை. கடலில் மூழ்கி இறந்து விட்டார். மீட்கப்பட்ட அவரின் சடலத்தில் இருந்த உடைகளில் இருந்து தபால் பை அறையின் சாவி, மீட்கப்பட்டது.
அமெரிக்க செனட் குழு டைட்டானிக் விபத்து குறித்து விசாரித்த போது உயிர் பிழைத்த டைட்டானிக் ஊழியர் ஹென்ரி எச்சஸ் இந்த தகவல்களை அவர்களிடம் கூறினார். பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த டைட்டானிக் சாவி லண்டனில் ஏலம் விடப்படுகிறது. 40 லட்சத்துக்கு மேல் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, April 11, 2009

சோவியத் விண்வெளி கதாநாயகன் சாதித்த தினம் இன்று (ஏப்ரல் 12 1961)


ஒரு காலத்தில் உலகின் வல்லரசாக திகழ்ந்த சோவியத் ரஷ்யாவும், பொருளாதார சரிவுக்கு பின்பும் பெரியண்ணன் பாணியை தொடரும் அமெரிக்காவும் 1960களில் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டனர். இந்த போட்டியில் எப்போதுமே முந்திக்கொண்டது. ரஷ்யா தான். முதன் முதலில் வஸ்தோக் 1 என்ற விண்கலத்தில் யூரி ககாரின் என்பவரை அனுப்பி சாதனை செய்தது. அந்த சாதனைநாள்தான் இன்று.
மாஸ்கோ நகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934ம் ஆண்ஐ மார்ச் 9ம் தேதி யூரி ககாரின் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினர். பள்ளி படிப்பு முடிந்த பின்னர் சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்றார். விமானியாக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். இந்த பயிற்சி மையத்தில் மிக்-15 ரக போர் விமானங்களை ஓட்ட பயிற்சி பெற்றார். இந்த பயிற்சியின் போது வலென்டினா கொர்யசோவா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முதன் முதலாக நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இருக்கும் விமானப்படை தளத்தில் பணியாற்றினார்.
1960ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை சோவிய அரசு தொடங்கியது. இந்த விண்வெளித் திட்டத்தின் கீழ் 20 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரானார் யூரியும் ஒருவர். யூரி ககாரினுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ககாரின் மட்டும் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதிஇதே நாளில் வஸ்தோக்1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்த முதல் மனிதரும் இவரே. விண்கலம் 1மணி நேரம்48 நிமிடங்கள்பறந்தது. அதன்பின்னர் அவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த விண்வெளி கதாநாயகனை இழந்து விடக்ககூடாது என்பதற்காக அதன்பின்னர் எந்த விண்பறப்புக்கும் அவரை அனுப்ப வில்லை. இருந்த போதிலும் 1968ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி விமானப்படை விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபமாக பலியானார் யூரி ககாரின்.

Friday, April 10, 2009

மக்கள் பிரச்சனைகளை மறக்க மத உணர்வுகளை தூண்டி


தேர்தலுக்கு தேர்தல் மக்கள்தான் ஓட்டுப்போடுகின்றார்கள். சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள், சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றுதான் ஓட்டுப்போடுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடிக்க சொல்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மக்களை குழப்பும், மக்கள் உணர்வுகளை தூண்டும் வேலைகளில் அரசியல்வாதிகள் இறங்கி விடுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த நாட்டை பீடித்த பிரச்னைகளாக பொருளாதார சரிவு, வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் சாதாரண பொது ஜனத்தின் கண்களுக்கு தெரிந்தது. ஆனால் இன்றோ வருண்காந்தி சொன்னதும், அதற்கு லல்லு பதில் சொன்னதும்தான் வாக்களார்கள் மனதில் எதிரொலிப்பதாக இருக்கிறது. இப்போது லேட்டஸ்டாக சீக்கியர்கள் படுகொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டதும், சிதம்பரத்தின் மீது ஷூ வீசப்பட்டதும் சேர்ந்திருக்கிறது. இன்னும் இருக்கும் நாட்களுக்கும் இதுதான் எதிரொலிக்கப்போகிறது என்றே தெரிகிறது. யதார்த்த மனிதனின் பிரச்னைகளை யோசிக்கக்கூட விடாமல் பிரச்னைகளை உருவாக்கி, வாக்காளர்களை ஏமாற்றி உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள்தான் இப்போது நடக்கின்றன.
மனித மனதை நல்வழிப்படுத்த, தூய்மை படுத்த வந்த மதங்களை உணர்வு ரீதியாக தூண்டி, வேறுபடுத்தி, நீ வேறு, நான் வேறு என்று சண்டையிட வைத்து, நீ இந்த மதமா உனக்கு ஆதரவு நான். நீ அந்த மதமா உனக்கு ஆதரவு இதோ நான் இருக்கிறேன் என்று அரசியல் மேடைகள் முழங்குகின்றன. பக்கத்து வீட்டுக்காரனிடம் கேக், கொழுக்கட்டைகளை பகிர்ந்து கொண்டது போய் இப்போது மதவிரோதம் வளர்க்கிறது அல்லது இந்த அரசியல்வாதிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல? எந்த தேர்தலில் மக்கள் பிரச்னை எதிரொலிக்கும் என்பதே அப்பாவி வாக்காளரின் கேள்வி? அதற்கு விடை சொல்வது யார்?