Sunday, April 26, 2009

சற்று முன் கிடைத்த தகவல்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம்: தமிழர்களின் இன்னல் தீருமா?


தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில்இலங்கை தமிழர்கள் இன்னல் போக்காமல்பிரசாரத்துக்கு கிளம்ப முடியாது என்றுகருணாநிதிக்கு நன்றாக தெரிந்து விட்டது. தன்அரசியல் எதிரி ஜெயலலிதா திடீரெனதன்நிலையில் இருந்து கீழிறங்கி தனிஈழத்துக்கு ஆதரவு என்று அறிவித்தது சர்வதேசஅளவில் வரவேற்பை பெற்றிருப்பதுகருணாநிதியின் வயிற்றில் புளியைகரைத்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் முதல்இரண்டு கட்டங்கள் காங்கிரஸ் கூட்டணிக்குசாதகமாக இல்லை என்று வந்த உளவுசெய்திகள் ஒருபுறம் இருக்க இனி மிச்சம்இருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலாவது எதையாவது செய்துவெற்றியை தக்க வைக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் சித்திரைவெயிலில் மண்டையை குழப்பிக்கொண்டிருக்கின்றர். தமிழகத்திலும் அவ்வளவுசாதகமாக இல்லை என்று சோனியாஜிக்கு தெரிந்தாலும், புலிகளை ஒழித்தே தீரவேண்டும் அதற்கு எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை. தன்னுடையஅசைண்ட்மென்டை ராஜபக்சே முடிக்க வேண்டும் என்று அவரது மனதுக்குள்ஒரு எண்ணம் ஓடுகிறது. மூத்த தலைவர் கருணாநிதிக்கும் இந்த எண்ணம்தெரியாமல் இல்லை. இலங்கை விவகாரம் அவ்வளவு பெரிதாகாது. நாங்கள்பார்த்துக்கொள்கிறோம் எங்களிடம் மீடியா பவர் இருக்கிறது என்று பேரன்கள்கொடுத்த வாக்குறுதியை பெருசு நம்பினார். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு போய்தன்னுடைய பரம வைரியே தனி ஈழத்துக்கு குரல் கொடுக்கும் அளவுக்குமுன்வந்ததும் அதற்கு எல்லைகளை தாண்டி ஆதரவு பெருகியதும் கடந்த 2 நாட்களாக அவரை தூக்கம் இழக்க செய்து விட்டது. அதன் விளைவே இந்த திடீர்உண்ணாவிரதம். எவ்வளவு அரசியல் மாச்சர்யங்கள் இருந்தாலும் தமிழர்களின்இன்னல் தீர்க்க கடைசி பட்ச ஆயுதமாக முதல்வர் கருணாநித உண்ணாவிரதஅஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதை பாரட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒருமூத்த அரசியல் வாதியை அவரது வயது கருதி அவரின் கோரிக்கையைநிறைவேற்றும் வகையில் சோனியாஜி தனது வன்ம நிலையில் இருந்து இறங்கிவந்து ராஜபக்சேயின் அலை பேசியில் கூப்பிட்டு, நிறுத்தடா போரை என்றுஉத்தரவிடுவாரா? என்பதுதான் உலகமெங்கும் இருக்கும் அப்பாவி தமிழர்களின்ஒரே கேள்வி. அப்படி நடந்தால் முதல்வரின் உண்ணாவிரதத்தை பாராட்டுவோம். சீக்கிரம் அவர் உண்ணாவிரதம் முடியவும் தமிழர்கள் பிரார்த்திக்க வேண்டும். அவரது உண்ணாவிரதம் நாடகமா? என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

No comments:

Post a Comment