Thursday, April 23, 2009

இதுவா இலங்கை தமிழர் நலன்?

தமிழர்கள் ரத்தம் சிந்தப்படுவது நிறுத்தக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்த பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சரி இந்த வேலை நிறுத்தத்தால் எத்தனை பேருக்கு தமிழுணர்வு கிளர்ந்தது. அல்லது அந்த தமிழர் உணர்வை தட்டி எழுப்பினார்களா? என்றால் இல்லை. கலைஞர் புகழ் பாடும் கலைஞர் டிவியும், அவரின் பேரன்கள் நடத்தும் சன்டிவியும் பந்த் நாளை விடுமுறை நாளாக கருதி திரைப்படங்களை ஒளிபரப்பின.
சமீபகாலமாக அப்பாவி மக்கள் பலியாவதைக்கூட பதிவு செய்ய மறுத்த இந்த தொலைக்காட்சிகளின் தமிழ் உணர்வு ஏன் இவ்வளவு கீழ்தரமாக மாறியது. பந்த் எதற்காக நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என்ன? என்பதை செய்தி கட்டுரையாக்கூட இந்த சேனல்கள் வழங்க முன்வராதது ஏன்? இலங்கை தமிழர்கள் இன்னல்களை ஒளிபரப்பினால் சோனியாஜி கோபித்து கொள்வார் என்பதாக இருக்குமோ?
இந்த வேலை நிறுத்தத்தை வழக்கம் போல் அ.தி.மு.க.,கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. பிரசாரத்தை தடுக்கவே கருணாநிதி வேலை நிறுத்தம் அறிவித்தார் என்று மதுரையில் ஜெயலலிதா முழங்கினார். முன்பு இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி நைட்டி அனுப்பியபோது அதை கிண்டல் செய்தவர்தான் ஜெயலலிதா என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது. எல்லாம் தேர்தல் செய்கின்ற மாயம். ஒரே ஒரு ஆறுதல் தேர்தல் வரும் பொழுதாவது இலங்கை தமிழர்களின் ஞாபகம் வருகிறதே அந்த வகையில் அவர்களின் ஞாபக சக்தியை பாராட்டலாம். மற்றபடி அவர்களின் இன்னல்களை போக்கும் அளவுக்கு எந்த தமிழக தலைவருக்கும் திராணிஇல்லை. சக்தியில்லை. வெட்கம் இல்லை.

No comments:

Post a Comment