Sunday, July 11, 2010

சீமான் ஜாக்கிரதை


இன்னொரு விஜயகாந்த் உருவாக்கப்படுகிறார்; சீமான் ஜாக்கிரதை


சீமான் மீது வழக்குப்பதிவு! தலைமறைவு என்று தினத்தந்தி முதல் இணையம் வரை செய்திகள் களை கட்டி உள்ளன.
சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் ஓட்டுக்களை பிரிக்க அரசின் தந்திரம் ஆரம்பமாகிவிட்டது என்றே இதை நான் கருதுகிறேன்.
விஜயகாந்த் இந்த முறையும் தனித்து போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க.கூட்டணி எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பில் மண்ணை கொட்டிவிட்டார் விஜயகாந்த். கொடநாட்டில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஓட்டுக்களை பிரிக்க அடுத்த தந்திரத்தை கருணாநிதி கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அதன் விளைவுதான் சீமான் மீது அடுக்கடுக்கான வழக்குகள். சீமான் தன் சுய உரிமையை, தமிழர்கள் நலன் பற்றி பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை. சட்ட சபை தேர்தலின் போது தனித்து போட்டி என்ற முடிவை மட்டும் அவர் எடுத்து விடக்கூடாது.
அப்படி முடிவெடுக்கும் பட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழர் நலனுக்கு எதிராக செயல்பட்ட மத்திய, மாநில அரசுகளை மீண்டும் ஆதரித்தது போல் ஆகிவிடும்.

இன்றைய பஞ்ச் டயலாக்

எண்ணைய் நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்காதீர்கள், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் மானியம் கொடுங்கள்;
சொன்னவர்; திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேசிங் அலுவாலியா