Sunday, December 6, 2009

முடியப்போகுது 2009









இந்த ஆண்டு முடிய இன்னும் 24 நாட்கள் இருக்கின்றன. உலகைச் சுற்றி, நாட்டை சுற்றி, மாநிலத்தை சுற்றி, நகரை சுற்றி, தெருவை சுற்றி, வீட்டை சுற்றி எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் தமிழினத்துக்காக போராடிய ஒரு போராட்டம் வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை மீண்டும் ஆட்சி செய்ய காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தி.மு.க. கூட்டணியே வெற்றிக்கனி பறித்தது. அம்மா வீட்டுக்குப்போன ராமதாஸ் அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறினார். கொடநாட்டில் ஓய்வெடுத்த அம்மா மீண்டும் சென்னைக்கு வந்து இடைத்தேர்தலில் குதிப்பதாக அறிவித்திருக்கிறார். எங்கள் தெருவில் இந்த மழைகாலத்தில் சில முதியவர்கள் இறந்து விட்டனர். என் குழந்தை நிறைய கேள்விகள் கேட்கிறாள். ஏர்டெல் இணைப்பில் இருந்து பிஎஸ்என் இணைப்புக்கு மாறியிருக்கிறேன். ஏன்? மாறினேனோ என்று என்னும் படி பிஎஸ்என்எல்லில் படுத்தி எடுத்துவிட்டனர்.
இந்த வருடம் மழை சென்னையை அவ்வளவாக மிதக்க விடவில்லை. ஆந்திராவில் அடுத்தடுத்த அதிரடிகளால் அந்த மாநிலம் குலுங்குகிறது. ராஜசேகர ரெட்டி மரணம். சந்திசேகரராவ் உண்ணாவிரதம்.
தமிழகத்திலோ நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியில் ஓய்வு அறிவிப்பு வெளியானது. 2010 ஜூனுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பு முரசொலியை தவிர மற்ற எல்லாவற்றிலும் வந்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டாரோ என்னவோ தெரியல.
இந்த ஆண்டில் ஒரு சிறிய பழைய அப்பார்ட்மெண்ட் வாங்க முயற்சித்து தோல்வியில் முடிந்தது. மன கசப்பும் ஏற்பட்டுவிட்டது.
எப்படியோ 2009 குழந்தையின் ஆயுள் முடியப்போகிறது. அடுத்த புதுவரவான 2010 எப்படி இருக்குமோ?



சோனியா-சபத்தில் வென்ற நாயகி. (தமிழினத்தை அழித்து)
பல்டியின் நாயகர்(முதல்வர் கருணாநிதி)
ராமதாஸ் (எப்படிங்கன்னா தோத்த கட்சியாச்சு?)
திருமாவளவன்(இரண்டு மனம் வேண்டும். பிழைத்து வாழ ஒன்று, தமிழர்களை பற்றி பேச ஒன்று)