Sunday, January 8, 2012

எப்பொழுதெல்லாம் கோபம் வரும்?

ரெளத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது அநியாயத்தை கண்டு பொங்கி எழுவதற்குத்தான். ஆனால் இன்றைக்கு தெருவில் இறங்கி நடந்தால் பொய்மையும், அநியாயமும்தான் நம்மை சுற்றி நடக்கிறது. பாரதியார் சொன்னது போல ரெளத்திரம் பழகினால் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும்.
வழக்கமாக பலர் கூறுவது போல கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று இங்கு நான் கூறப்போவதில்லை. எப்பொழுதெல்லாம் கோபம் வரும் என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்ததை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். இது அறிவுரை ஏதும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
1. பிறரிடம் ஏதாவது எதிர்பார்க்கும் போது, அதை அவர்கள் செய்யாதபோது...
2. ஒரு சிக்கலை தீர்க்க ஆழமாக யோசித்துக் கொண்டிருக்கும்போது யாராவது இடையூறு செய்யும் போது...
3. தகுதிக்கு மீறி, அளவுக்கு மீறி ஆசைப்பட்டு விட்டு, அது நிறைவேறாதபோது...
4. சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பிறர் தொந்தரவு செய்யும்போது...
5. மாத இறுதியில் பணப்பற்றாக்குறையின் போது...
6. தகுதி இல்லாதவர்கள் உயர் அதிகாரிக்கு காக்காய் பிடித்து முன்னேறும் போது....
7. பிறர் நம்மை ஏமாற்றும் போது...
8. சரியான நேரத்துக்கு பேருந்து கிடைக்காத போது...
9. எதற்கெடுத்தாலும் விதியை சுட்டிக்காட்டுவது...
10. நேரத்துக்கு தகுந்தவாறு மாறும் மனிதர்களை பார்க்கும்போது....
எனக்கு தெரிந்த என்னை கோப ப் படுத்தும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பலருக்கு இதுதவிர வேறு ஏதாவது அனுபவங்கள் இருக்கலாம். சரி கோபத்தை தெரிந்து கொண்டாயிற்று.. அது வராமல் தடுப்பது எப்படி என்று அடுத்த கேள்வி எழலாம். ஆனால் கோபம் எப்படி வருகிறது ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்து விட்டாலே நீங்கள் அதில் இருந்து விடுபட விரும்புகிறீர்கள் என்று அர்த்தம் எனவே. அது பற்றி சொல்லி கூடுதலாக போரடிக்க விரும்பவில்லை. நாளை அல்லது நேரம் கிடைக்கும் போது இன்னொரு விஷயம் பற்றி சொல்கிறேன்.