Wednesday, April 29, 2009

லேட்டஸ்ட் நியூஸ்:பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ்


இருவர் படத்தில் நடித்து கருணாநிதியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் இப்போது புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட பத்திரிகையாளர்கள் அசோசியேஷனில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் ஹாயாக பேசிக்கொண்டிருந்த போது நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த தகவலை கூறியிருக்கிறார்.
நடிப்பது என்பது எனக்கு ஒரு பயணம் செய்வது போல.நடிப்பதால் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்வதன் மூலம் அதுபற்றி நிறையபேரிடம் பேசலாம். அனுபவங்கள் மூலம்தான் எந்த ஒரு நடிகரும் நம்பிக்கைகையும், நடிப்பில் முதிர்ச்சியும் பெற முடியும் என்று நான் கருதுகிறேன்.
புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்ப பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பம் தெரிவித்துள்ளேன்.
மற்றபடி இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாகரன் தோற்றத்தை காப்பியடிக்க விரும்பவில்லை. அவர் நிஜத்தில் எப்படி இருப்பார், எப்படி பேசுவார் என்று தகவல்களை சேகரிக்கவில்லை. இயற்கையாக அவரைப் போன்று நடிப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று ரகசியம் காத்தார்.
அவர் ரகசியம் காப்பது நல்லதுதான். ஏற்கனவே செல்வமணி எடுத்த குற்றபத்திரிகைக்கு நேர்ந்த கதி எல்லோரும் அறிந்தஒன்றுதான்.

No comments:

Post a Comment