Sunday, April 12, 2009

டைட்டானிக் சாவி ஏலம் (1912 ஏப்ரல் 14 டைட்டானிக் மூழ்கிய தினம்)


லண்டன்,ஏப்ரல் 12:
டைட்டானிக் கப்பலில் இருந்த அறை ஒன்றின் துருப்பிடித்த சாவி லண்டனில் 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்ஆம்டன் துறைமுக நகரில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் கப்பல் ஊழியர்கள் உட்பட 2ஆயிரத்து 233 பேருடன் புறப்பட்டது.
நியூபவ்ண்ட் லேண்ட் தீவுக்கு அருகில் கடலில் சென்று கொண்டிருந்த போது வானிலை மாற்றத்தால் அந்த பகுதியில் உறைபனி ஏற்பட்டது. இதனால் பனிப்பாறையில் மோதி 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில் டைட்டானிக் மோதியதில் கவிந்தது. நள்ளிரவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த பலர் என்ன நடக்கின்றது என்று தெரியாமலேயே ஆயிரத்து 517 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிர்பிழைத்தவர்கள் 706 பேர் மட்டுமே.
இந்த சோகம் நடந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் டைட்டானிக் கப்பல் அறை ஒன்றின் சாவி லண்டனில் ஏலத்துக்கு வருகிறது.
டைட்டானிக் முதல் வகுப்பு அறையின் ஊழியர் எட்மண்ட் ஸ்டோன் என்பவர் கப்பல் மூழ்கிய போது பயணிகளை காப்பாற்ற முயற்சித்தார். இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்ட தபால் பைகள் மாடியில் இருந்த ஒரு அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மாடிக்கு செல்லும் கதவு மூடப்பட்டிருந்தது. அந்த கதவை திறந்து விட்டால் நிறையப்பேரை காப்பாற்றலாம் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. தன்னிடம் இருந்த சாவியால் அந்த கதவை திறந்து விட்டார். பின்னர் அந்த வழியே தப்பித்து செல்லும் படி பயணிகளிடம் கூறினார். அதன் படி பல பயணிகள் தப்பித்தனர். ஆனால் என்ன பரிதாபம் எட்மண்ட் ஸ்டோனால் தப்பிக்க முடியவில்லை. கடலில் மூழ்கி இறந்து விட்டார். மீட்கப்பட்ட அவரின் சடலத்தில் இருந்த உடைகளில் இருந்து தபால் பை அறையின் சாவி, மீட்கப்பட்டது.
அமெரிக்க செனட் குழு டைட்டானிக் விபத்து குறித்து விசாரித்த போது உயிர் பிழைத்த டைட்டானிக் ஊழியர் ஹென்ரி எச்சஸ் இந்த தகவல்களை அவர்களிடம் கூறினார். பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த டைட்டானிக் சாவி லண்டனில் ஏலம் விடப்படுகிறது. 40 லட்சத்துக்கு மேல் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment