Thursday, April 30, 2009

பஸ் கட்டண குறைப்பு மற்றும் ஒரு நாடகம்




பிரசார களத்தில் தி.மு.க.,வுக்கு பேசுவதற்கு பொருள் இல்லை. அல்லல்படும் இலங்கை தமிழர் பற்றி பேசினால் சோனியா கோபித்துக்கொள்வார் எனவே அது பற்றி பேசமுடியாது. மக்கள் பிரச்னைகளுக்கு இந்த 3 ஆண்டுகால தி.மு.க., அரசின் வேதனை கலந்த சாதனைதான் காரணம். அதை பற்றியும் சொல்லமுடியாது. அதை செய்தோம் இதை செய்தோம் என்று பட்ஜெட் புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்க முடியும்.
தமிழக உளவு துறை அதிகாரிகள் எடுத்த ரகசிய சர்வேயில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மண்ணை கவ்வுவது நிச்சயம் என்று ரிப்போர்ட் கொடுக்கப்படுகிறது. அதில் முக்கிய பிரச்னையாக பஸ் கட்டண உயர்வும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பஸ் கட்டண உயர்வு குறித்து எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அது அதிமுக ஆட்சியில் செய்தது. நாங்கள் புதிதாக எதுவும் செய்ய வில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் நேரு அரசு உத்தரவுகளை எடுத்துக்காட்டி பதில் சொன்னார். எனவே போராடி போராடி அல்லது அடுத்தடுத்து வேறு பிரச்னைகள் வந்ததால் பஸ் கட்டண உயர்வையே பலரும் மறந்து விட்டனர். இந்த நிலையில்தான் பஸ் கட்டண குறைப்பை அறிவித்திருக்கின்றனர்.
உளவு துறை தந்த அதர்ச்சி அறிக்கைகள். இன்றைய தினம் முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்யும் முன்பாவது மக்களை குளிர்விக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த திடீர் கட்டண குறைப்பை அரசு செய்திருக்கிறது. விதி முறை மீறல் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரல் சுட்டியிருக்கிறார்.
பஸ் கட்டண குறைப்பை நாம் நம்ப போகிறோமோ நம்பி ஓட்டுப்போடப்போகிறோமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. மிச்சமிருக்கிற 13 நாள் நாடகத்தில் இதுவும் ஒரு கபட நாடகம். இலங்கை தமிழர்களை ஏமாற்ற பந்த், உண்ணாவிரத நாடகங்களை செய்த கருணாநிதி, பஸ்கட்டண குறைப்பு நாடகத்தையும் செய்திருக்கிறார். இன்னும் சில நாட்கள் இது போன்ற நாடகங்கள் தொடரலாம். நாடகத்தை நாடகமாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். மற்றபடி ஓட்டுப்போடுவதற்கு முன்பு சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment