Tuesday, July 14, 2009

நான் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு புத்தகம்

வாழ்க்கையில் ஒரு விபத்து போலத்தான் புத்தகம் எழுதுவதும் நேர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணையாழி, சுதேசமித்திரன்&இளையமித்திரன் உள்ளிட்ட சில இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதே திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நண்பர் என் கவிதைகளை புத்தகமாக வெளியிடலாமே என்று விரும்பினார். அதற்காக அட்டைப்படம் எல்லாம் கூட ஒரு நண்பர் போட்டுக்கொடுத்தார். பட்டுக்கோட்டை பிரபாகர் கூட முன்னுரையெல்லாம் எழுதிக்கொடுத்தார். அதன் பின்னர் அந்த நண்பர் என் கவிதைகளை புத்தகமாக போட முன்வரவில்லை. எனவே என் முதல் முயற்சி முயற்சியிலேயே முடிந்து போனது.
அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பிரபல நாளிதழில் பணியாற்றினேன். பின்னர் அங்கிருந்து விலகி விட்டேன். அந்த நாளிதழில் பணியாற்றிய சிலர் இணைந்து ஒரு பதிப்பகம் தொடங்கினர். என் மேல் அக்கறை கொண்ட மூத்த நிருபர் மொழிபெயர்ப்பு புத்தகம் எழுதும் வாய்ப்புக்கொடுத்தார். டோரிஸ் லெஸ்சிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வாங்கினர். அவரைபற்றி எழுதுங்கள் என்றார். அதன் விளைவாக எழுதியதுதான் டோரிஸ் லெஸ்சிங் என்ற புத்தகம்.
மீண்டும் புத்தகம் வருவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. என்னை புத்தகம் எழுதச்சொன்னவர் அந்த பதிப்பகத்தில் இருந்து சில காரணங்களுக்காக விலகிவிட்டார். எனவே வேறு ஒரு பதிப்பக நண்பர் மூலம் அணுகி சந்தியா பதிப்பகத்தில் இருந்து என் புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இது என்னுடைய முதல் புத்தகம்

புத்தகத்தின் தலைப்பு: டோரிஸ் லெஸ்சிங்

நூலாசிரியர்: கே. உமாபதி

வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை&83

முடிந்தால் வாங்கி படியுங்கள் நண்பர்களே!

இந்த புத்தகத்தின் விமர்சனம் கடந்த 12 07 09 தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment