Tuesday, May 5, 2009

பிளாஷ் நியூஸ்: தமிழகத்தில் சோனியா பிரசாரம் இல்லை: தமிழர் பிரச்னை பற்றி பேச தயக்கம்


இலங்கை தமிழர்கள் ரத்தம் சிந்துவது பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காத சோனியா தமிழகத்தில் எப்படி பிரசாரம் செய்வது என்று தயங்கிக்கொண்டிருந்தார். முதல்வர் கருணாநிதியும் எப்படி சோனியாவுடன் ஒரே மேடையில் உட்கார்ந்திருப்பது என்று தயங்கி கொண்டிருந்த வேளையில் உடல் நலத்தை காட்டி அப்பல்லோ மருத்துவமனையில் ரெஸ்ட் எடுக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா களத்தில் எதிரியே இல்லாமல் 39 தொகுதிகளிலும் கலக்கி வருகிறார். அ.தி.மு.க.,வென்றால் நான் சொல்லும் மத்திய அரசு இலங்கையின் மீது போர் தொடுத்து தனி ஈழத்தை ஏற்படுத்தும் என்று முழங்குகிறார். அவருக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத காங்., தி.மு.க., கூட்டணி என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தது. எத்தனை நாளைக்குத்தான் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி புலி புலி என்று புலம்புவது. புலி பிரசாரம் எடுபடாத நிலையில் பிரசாரத்துக்கு தமிழகம் வந்து அவமானப்படுவதை விட வராமல் இருப்பதே மேல் என்று கருதி விட்டார்.
தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்னை கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சோனியா தமிழகம் வருவது அவ்வளவு நல்லதாக இருக்காது. ஒரு வேளை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு பேட்டி அளித்து விட்டு பின்னர் வரலாம் என்று மத்திய உளவுத்துறை சோனியாவுக்கு ஆலோசனை கூறியது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா? அதெல்லாம் பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதாக டில்லி தகவல் ஒன்று கூறுகிறது.
13ம் தேதிக்கு முன்பே அல்லது 16ம் தேதி முடிவு தெரிவதற்கு முன்பே ஆளும் வர்க்கத்தின் தோல்வி முகம் வெளுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. உண்மையை, தமிழர்களின் உணர்வை மதிக்கத்தெரியாத, அவர்களின் கண்ணீரை துடைக்காத கோழைகளாக மாறிவிட்டவர்கள் இவர்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்வது? சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
வேறு ஒரு நாளில் சோனியா பிரசாரம் செய்வார் என்று அறிவித்திருக்கின்றனர்.பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் உள்ள ஓட்டு மொத்த தமிழர்களையும் சிறை வைத்து விட்டு யாரு மற்ற பரந்த மைதானத்தில் யாரை பார்த்து உரை நிகழ்த்தப்போகிறார் என்று தெரியவில்லை. அல்லது தமிழகத்துக்கு நேரே விண்வெளியில் மேடை போட்டு பேசப்போகிறாரோ என்னவோ தெரியவில்லை. எதிர்காலத்தில் காங்கிரசுக்கு தமிழகத்தில் முகம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

No comments:

Post a Comment