Wednesday, April 29, 2009

எக்ஸ்குளூசிவ்:சென்னை ரயில் விபத்து: புலிகளை தொடர்பு படுத்த முயற்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன் அதிகாலை ஒரு மின் ரயிலை எடுத்துக்கொண்டு கிளம்பிய மர்ம மனிதர் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலில் பலமாக மோதினார். அவரும் பயணிகள் 3 பேரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர். இதற்கு காரணமான நபர் யார்? என்பதை ஆராயாமல் இந்த வழக்குக்கு மே 13ம் தேதி வரை ஒரு புதிய கதை எழுத ஆளும் வர்க்கம் தயாராகி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சிபிசிஐடி விசாரணைக்கும் இந்த வழக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே இந்த வழக்கு திசைமாறி செல்ல வாய்ப்புள்ளது என்று கமிஷன் ஆபீஸ் நிருபர் ஒருவர் கூறுகிறார்.
அரசுக்கு பிடிக்காதவர்களை வழக்கில் கொண்டு வருவதற்காகத்தான் சிபிசிஐடி இயங்குகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் உண்மையை மூடி மறைத்து புலிகளை சம்பந்தப்படுத்தி ஜெயலிதாவின் பிரசாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியில் தமிழக காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இந்த விபத்து குறித்து நுணுக்கமாக கண்டறிய வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக்கிறார். எனவே அடுத்த சில நாட்களில் புலிகளை தொடர்பு படுத்தி காட்சிகள் அரங்கேறலாம்.

No comments:

Post a Comment