Thursday, April 9, 2009

இந்த நாளைய வரலாறு (ஏப்ரல் 11, 1961 )


நாய்களை போல யூதர்களை கொல்வதற்குஹிட்லருக்கு உதவிய அடால்ப் எச்சிமேன் என்பர்மீதான வழக்கு விசாரணை தொடங்கிய தினம்இன்று.
இவர் ஹிட்லர் ஆட்சியின் போது ஜெர்மன்எல்லைக்கு உட்பட நாடுகளில் வசித்த யூதர்களைபடுகொலை செய்ய காரணமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த உடன்அமெரிக்க கூட்டுப்படைகளால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்துதப்பித்து விட்டார். போர் குற்றங்களுக்கானதீர்பாயத்தின் தீர்ப்புக்கு பயந்து தப்பித்து விட்டார். 1950ம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குள் அடைக்கலம்புகுந்தார். அவரைப் போல பல போர் குற்றவாளிகள் இங்கு அடைக்கலம்புகுந்தனர். இருந்த போதிலும் 1960ம் ஆண்டு இஸ்ரேலின் உளவு படையினர்அடால்ப் எச்சிமேனை வளைத்து பிடித்து விட்டனர்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அடால்ப் எச்சிமேன் மீது 15 குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் மனிதஉரிமை மீறலுக்கு எதிரான குற்றங்களும் அடக்கம். 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்முன்பு குண்டு துளைக்காத கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட்டார். அடால்ப்எச்சிமேன் மீதான குற்றசாட்டுகளை முழுவதையும் 15 நிமிடங்களில் தலைமைநீதிபதி மோஸ்கி லாண்டாவ் வாசித்து முடித்தார்.
அதன் பின்னர் விசாரணை தொடங்கியது. அடால்ப் எச்சிமேனின் வழக்கறிஞர்வாதிடும் போது, தன் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்றும், நாஜி ஆட்சியாளர்ஹிட்லர் உத்தரவுப்படி நடந்து கொண்டதாகவும் கூறினார். விசாரணை பலமாதங்களாக தொடர்ந்து நடந்தது. இறுதியில் 1961ம் ஆண்டு டிசம்பரில் அவர்மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 1962ம் ஆண்டு மேமாதம் டெல் அவிவ் நகரில்தூக்கிலிடப்பட்டார். யூதர்களை படுகொலை செய்த விவகாரத்தில் இவருடையவழக்குதான் மிகப்பெரிய வழக்கு. இதே போல மேலும் 12 நாஜி அதிகாரிகள்தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment