Thursday, March 26, 2009

தைலாபுரத்தில் இருந்து போயஸ் தோட்டத்துக்கு...

தமிழ்குடிதாங்கி மருத்துவர் ஐயா ராமதாஸ் மீண்டும் போயஸ் தோட்டத்து பக்கம் கால்பதித்திருக்கிறார். எப்போதுமே வெற்றிக்கூட்டணி தேடி செல்லும் அவரின் கணக்கு சரியா தவறா? என்பது மே 16ம் தேதி 11 மணிக்கு மேல் தெரியும். தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் ராமதாஸ் 1980களுக்கு முன்பு திண்டிவனத்தில் கிளினிக் வைத்திருந்த சாதாரண மருத்துவர்தான். வன்னியர் சங்கத்தின் மூலம்தான் அவரின் அரசியலுக்கான விதை தோன்றியது.
வன்னியருக்கு இட ஒதுக்கீடு கோரி திண்டிவனம்&சென்னை தேசிய சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு அவர் தொடங்கிய போராட்டம்தான் நாடு முழுவதும் அவரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தால் ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகமே ஸ்தம்பித்தது. இந்த ரத்தகளறிதான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது. அதன் விளைவாக பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. வடமாவட்டங்களில் அசைக்கமுடியாத கட்சியாக இன்றளவும் நிலைத்திருக்கிறது. மக்களின் உடலுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் ஐயா. தேர்தலுக்கு தேர்தல் வெற்றியின் ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பதில் வல்லவராய் திகழ்கிறார்.
முதல் முதலில் அவரின் கட்சி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த தலில் எழில்மலை ராதாசை மரபு திமிராளி என்று விமர்சனம் செய்திருக்கிறார். இதன் பின்னர்தான் அடுத்தவர்களை நம்பாமல், குடும்பத்தை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்ற கொள்கையை தளர்த்தி அன்புமணியை அரசியலில் இறக்கினார்.
அவரின் அதிரடி போராட்டங்கள் பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. விமர்சனங்களோடு சரி எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
நடிகர்களை தேடி இளைஞர்கள் போக்கூடாது, மது ஒழிப்பு போன்ற பிரசாரங்கள் எந்தவிதபலனையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் அடுத்தவர்களை குறை சொல்லும் முன் தன் கட்சி எம்.பி.க்களையோ அல்லது அமைச்சர்களையோ ராஜினாமா செய்யும்படி எதுவும் சொல்லமால் இருந்தது ஏன் என்பது அப்பாவி தமிழனின் கேள்வி.

ராமதாசிடம் சில கேள்விகள்:1. ரிலையன்ஸ் சில்லறை வணிகத்துக்கு எதிரான போராட்டம் என்ன ஆச்சு?
2. அடுத்து அதிமுக ஆட்சி வந்தால் டாஸ்மாக் கடைகளை மூட சொல்வீர்களா?
3. உங்கள் பிள்ளையை மட்டும் ஏன் தேர்தலில் போட்டியிட வைப்பதில்லை?
ராமதாசின் ஒரே சாதனை: மக்கள் தொலைகாட்சி, தமிழ் ஓசை பத்திரிகை ஆகியவற்றில் தமிழ் ஆட்சி செய்வது.

1 comment:

  1. thanks for u sir. Update news in Tamil Nadu .Very like to the news.

    ReplyDelete