Thursday, December 29, 2011

நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மை?

கற்பனையில் உழன்று கொண்டிருக்கமால் நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொண்டால், அதைவிட வரம் என்பது வேறு இல்லை. அதனால் கிடைக்கும் நன்மைகள்;

1. அடுத்தவர்கள் பேசும்போது என்ன சொன்னீங்க என்று கேட்க தேவையில்லை
2. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.
3. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்களை தவிர்க்க முடியும்
4. மாணவர்களாக இருந்தால் ஆசிரியரின் பாடங்கள் புரியும்
5. வேலை செய்பவர்களாக இருந்தால் அலுவலகத்தில் கவனமாக செயல்பட முடியும்.
6. தொழிலில் புதிய யுத்திகளை செயல்படுத்த முடியும்.
7. பேசுவதில் தெளிவு ஏற்படும்(கற்பனையில் இருந்தால் வார்த்தைகள் தடுமாறும் )
8. முக்கியமாக எவ்வளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம் என்பது புரியும்
9. அனாவசிய குழப்பங்கள் தீரும்
10. சாதிப்பதில் கவனம் ஏற்படும்

No comments:

Post a Comment