Tuesday, December 27, 2011

நிகழ்காலத்தில் இருப்போம்


கடந்த காலம், எதிர்காலத்தை பற்றி ஏன் நினைக்க வேண்டும்?

மனிதர்களின் இயல்பானது கடந்த காலத்தை நினைத்து துன்ப ப்படுவது அல்லது எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுவது. கடந்தகாலம், எதிர்காலம் இரண்டையும் நினைத்துக்கொண்டே உழன்று கொண்டே இருப்பதுதான்.நாள் ஒன்றுக்கு 24 மணிநேரம் உள்ளது. தூங்குவதற்கு 8 மணி நேரம் செலவிடுவது போல 16 மணி நேரத்துக்கும் மேலாக நாம் கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நினைத்துக்கொண்டே இருந்தால். நிகழ்காலத்தை பற்றி நாம் நினைக்கிறோமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இதனால் நேரம் விரையம் ஆகியது என்பது புரிகிறதல்லவா?

கடந்த காலத்தை பற்றி நினைப்பதால் எழும் விளைவுகள்
1. மனசோர்வு
2. மனதில், மூளையில் ஏற்படும் வேண்டாத பதிவுகள்
3. செயலில் வேகமின்மை.
4. முடிவு எடுக்க முடியாமல் திணறுதல்
5. அல்சர் போன்ற வியாதிகள்
6. மனபீதி, குழப்பம் உள்ளிட்டவை

எதிர்காலத்தை பற்றி நினைப்பதால் ஏற்படும் விளைவுகள்

1. எந்நேரமும் கற்பனையில் இருப்பது
2. நிறைவேறுமா என்று தெரியாமல் ஆசைப்படுவது
3. நமக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா என்று தெரியாமல் குழப்பம்
4. நாளை என்ன நடக்குமோ என்ற பயம், பீதி

நிகழ்காலத்தில் எப்படி இருப்பது?
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்கிறோம். நம் வீட்டில் இருந்து கோவிலுக்கு போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே செல்லுங்கள். தினமும் இப்படி செய்தால் நீங்களாகவே கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போது எண்ணிக்கொண்டே செல்லும் பழக்கத்துக்கு வந்து விடுவீர்கள். பாதையில் சாணி, குப்பைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனித்து, ஒதுங்கி செல்வீர்கள். நடப்பதில் கவனம் இருக்கும்.
உங்கள் வீடு இரண்டாம் மாடியில் இருக்கிறது என்றால் உங்கள் வீட்டுக்கு செல்வதற்கு எத்தனை படிகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி படிகளை எண்ணிக்கொண்டே செல்லுங்கள். இப்போது உங்களுக்கு படியில் என்ன நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். ஒரு சில படிகள் லேசாக பெயர்ந்திருக்கின்றன. சுண்ணாம்பு ஒட்டியிருக்கிறது என்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் கவனத்துக்கு வரும்.
இப்படித்தான் ஒவ்வொரு செயலையும் நிகழ்காலத்தில் செய்ய வேண்டும். நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மைகள் என்பது பற்றி நாளை சொல்கிறேன்.

No comments:

Post a Comment