Wednesday, March 18, 2009

தேர்தல் திருவிழா: கிராமத்தில் தொடங்கும் கூறு


ஜூன் 2ம் தேதி இந்த நாட்டின் பிரதமராக யார் பதவியேற்பார் என்ற ஊடகங்களின் பிரசாரத்தில் பாதிக்கப்படாத குக்கிராமத்து ராமசாமிக்கும், குப்புசாமிக்கம் அதில் அக்கறை இல்லை. அந்த குக்கிராமத்து பொதுஜனம் நம்ம ஜாதி, அதை கிராமத்தில் அடங்கியிருக்கும் தொகுதியை அந்த கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது. கூட்டணியின் தலைமையான நாம்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டணிக்குள் குஸ்தி சண்டைகள்நடக்கின்றன.
ஜாதியில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்று முன்பருவ கல்வியில் இருந்து தொடரும் கற்பிதங்கள் நிஜத்துக்கு மாறாகவே இருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளில்தான் வடை, காப்பியோடு அரசியல்வாதிகளின் வாயில் மென்று துப்பப்படுகிறது ஜாதி. அந்த தொகுதியில் நம்ம ஆள். இந்த தொகுதியில் நம்ம ஆள் என்று உடைபடுகின்றன நிஜங்கள். நீ என் ஜாதியை சேர்ந்தவன். நீ எனக்குத்தான் ஓட்டுப்போடனும். அவனுக்கு போட்டாயோ தொலைந்தாய் என்று கிராமத்து கிளைசெயலாளர்களின் மிரட்டல்கள். மாவட்டத்திடம் போய் கும்பிடு போடும் கிளைசெயலாளர் வேறு என்ன செய்வான்? மாவட்டம் மாநிலத்திடம் கும்பிடுபோடவேண்டும். மாநிலம் மத்தியில் கும்பிடு போடவேண்டும். குக்கிராமத்தில் தொடங்கும் கூறு போடல்தான் நாடுவரை நீள்கிறது. கூறுபோடுதில் பிணக்குகள் உ.பி., முதல் கேரளா வரை தொடர்கிறது.
ஒரிசாவில் பாரதிய ஜனதாவை இன்னும் துணை வைத்திருந்தால் கிறிஸ்தவர்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்பதால்தான், நவீன் பட்நாயக் தகுந்த நேரத்தில் பாரதிய ஜனதாவை கழற்றிவிட்டு விட்டார். எல்லாம் ஓட்டு செய்கின்ற மாயம். தெலுங்கானாவை பிரிக்கக்கூடாது என்று 5 ஆண்டுக்கு முன்பு மல்லுக்கட்டிய சந்திரபாபு நாயுடு இப்போது சந்திரசேகர ராவுடன் கைகோர்க்கிறார். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம். மாநிலத்தை, நாட்டை கூறு போட்டு குளிர் காய வருகிறது கூட்டம். எல்லாம் மே 16ம் தேதி வரைதான். அப்புறம் குப்புசாமியும், ராமசாமியும் வழக்கம் போல நாதியற்றவர்கள்தான். அவர்களுக்கு வழக்கம்போல ஆட்டுக்குட்டியும், நாய் குட்டியும்தான் துணை.

No comments:

Post a Comment